பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தகுதியற்றது, பயனற்றது, உலகப் பற்றுள்ளவர்களுக்கே பொருத்தமானது. மற்றொரு வழி (உடலைத் துன்புறுத்திக் கொள்ளும்) கடுமையான நோன்புகளை மேற்கொள்ளும் வழி - இதுவும் வழக்கமாயிருந்து வருகிறது. இதுவும் வேதனை தருவது பயனற்றது. (2)

ஒ. பிக்குகளே! பெரிய சாகரத்திலே முத்துக்கள், பலவிதமான மணிகள் நிறைந்திருக்கின்றன. அதுபோலவே, இந்தத் தருமத்திலும், விநயத்திலும் முத்துக்களும், பலவிதமான மணிகளும் நிறைந்திருக்கின்றன. அவைகளிலே சேர்ந்தவை நான்கு ஸதிப் பிரஸ்தானங்கள். நான்கு ஸம்யப் பிரதானங்கள் "நான்கு இருபத்திபாதங்கள்,_ ஐந்து பலங்கள்,' ஏழு போத்தியாங்கங்கள்," ஐந்து இந்திரியங்கள்,'அஷ்டாங்க மார்க்கம்" ஆகியவை." -

தரும உபதேசத்தை மகிழ்வுடன் பின்பற்றி, தருமத்திலேயே திளைத்து, தருமத்தையே எப்போதும் சிந்தனை செய்து, தரும வழியிலே நடக்கும் பிக்கு உண்மையான தருமத்திலிருந்து பிறழ்வதில்லை.

" நான்கு ஸதிப்பிரஸ்தானங்கள். (பாலி மொழியில் ஸ்திடட்டாணங்கள் என்பர். ) உடல், புலன்களின் உணர்ச்சிகள், மனம்,நிருவாணம் (தருமம் ஆகியவை சம்பந்தமான மனோதத்துவ உண்மைகள்: அவை முறையே காடானுடாஸ்னை, வேதனானுபாஸனை, சித்தானுபஸனை தருமானுபாஸனை எனப்படும், "நான்குலம்யப் பிரதானங்கள்: மனத்தில் தீய எண்ணங்கள் தோன்றாமல் தடுத்தல், முன் தோன்றியவைகளை அகற்றல், நல்லெண்ணங்கள் தோன்றச் செய்தல், முன்தோன்றிய நல்ல எண்ணங்களை வளர்த்தல் ஆகிய நான்கு பலறகள, " நான்கு இருபத்தி பாதங்கள்: சாந்தம், வீரியம். சித்தம். மீமாட்சை என்பவை (Urge Energy, 77 ought snvestigation) ஐந்து பலங்கள் சிரத்தை வீரியம், ஸ்தி, ஸமாதி. பிரஞ்ஞை என்ற ஐந்து ஆற்றல்கள். " ஏழு போத்தியாயங்கள். மெஞ்ஞானமடைவதற்குரிய ஏழு அங்கங்கள் - லதி, தரும விசாரம், வீரியம், ஆனந்தம், மனனம், சமாதி, உபேட்சை 'ஐந்து இந்திரியங்கள் சிரத்தை வீரியம்,ஸ்தி, சமாதி, பிரகுகுை என்ற ஐந்து மன ஆற்றல்கள். "அஷ்டாங்க மார்க்கம் இந்நூலில் 37 - ம் அத்தியாயத்தைட் பார்க்கஉம். 64 | புத்தரின் போதனைகள்