பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

...தானம்,ஒழுக்கம், தன்னடக்கம், ஆணவத்தை அடக்கல் ஆகியவை, ஆணுக்கும், பெண்ணுக்கும் அரிய புதையல் தனமாகும். மற்றவர்கள் அதை எடுத்துக்கொள்ள முடியாது, திருடர்கள் அதைத் திருடிக் கொண்டுபோக முடியாது. ஞானி நற்கருமங்களைச் செய்து வரட்டும்; ஒருவருக்குப் பின்னால் தொடர்ந்து செல்லக்கூடிய புதையல் அது ஒன்றுதான். ' இந்தப் புதையலிலிருந்து இம்மையிலே செழிப்பும். மறுமையிலே பேரின்பமும், நிருவான முக்தியும் பெறமுடியும். தெளிவான நற்காட்சி. உள்ளத்தின் விடுதலை, சீடன் அடைய வேண்டிய பயிற்சிகளின் நிறைவு, தனக்குத்தானே ஞான ஒளி பெறுதல், ஆகியவை அனைத்தும் - புத்தநிலைகூட இந்தப் புதையலிலிருந்து கிடைக்கும். 36 | புத்தரின் போதனைகள்