32
உன் மகளுக்குத் தக்க வரன் வந்தால், வெளியே போயிருக்கும் அவளுடைய தந்தையின் வரவைக்கூட எதிர்பார்க்க வேண்டாம். - ஸ்பெயின்
திருமணம் என்ற கோணியில் தொண்ணூற் றொன்பது பாம்புகளும், ஒரு விலாங்கும் இருக்கும். -( ,,)
காதலுக்காகக் கலியாணம் செய்து கொள்பவன் துக்கத்தோடு வாழ வேண்டும். -( ,,)
திருமணம் செய்து கொண்டு அடங்கிக்கிட. -( ,,)
திருமணம் செய்து கொள்ள உறுதி கொண்டவன் அண்டை அயலார்களைப் பார்த்துக் கொள்வது நல்லது. -( ,,)
வீட்டைக் கட்டுபவனுக்கும் திருமணம் செய்துகொள்பவனுக்கும் எந்த நேரத்திலும் அபாயம் வரும். - சுவீடன்
கிழவன் ஒரு குமரியை மணந்து கொண்டால், அவன் இளைஞனாகி விடுவான், குமரி கிழவியாவாள். -யூதர்
உனக்கு உறவினர் இல்லாவிட்டால், திருமணம் செய்து கொள். -எகிப்து
கடவுள் ஒருவனைத் தண்டிக்க விரும்பினால், அவனுக்குத் திருமணம் பற்றிய நினைவை உண்டாக்குவார்.
- ஜெர்மனி
முதலாவது மனைவி இறைவனிடமிருந்து வருகிறாள்; இரண்டாவது மனைவி மனிதரிடமிருந்து வாருகிறள் : மூன்றாவது மனைவி சயித்தானிடமிருந்து வருகிறாள்,
-ஹங்கேரி
ஓர் ஏழை பணக்காரியை மணந்து கொண்டால், அவள் மனைவியல்லள் -யஜமானி. - கிரீஸ்
நான் விவாகம் செய்து கொள்ளவில்லை, என் தந்தையும் விவாகமில்லாது இருந்திருந்தால் எவ்வளவு நலமாயிருந்திருக்கும். -( ,,) சமுதாயத்தின் முதற் கட்டுப்பாடு திருமணம். -லத்தீன் திருமணத்தைப் புனிதமாக்குவது காதல் ஒன்றுதான்,
-டால்ஸ்டாய்