கழுகு
ஆழிகளின் அதல பாதாளத்தில் என் இதயவாயில் திறக்கப் போகிறது. கதவு ஒருக்களித்தாற்போல் திறந்தது. வாயில் துண்டு
பீடி. முதல் அதிர்ச்சி. குறைந்தது ஒரு மாத அழுக்குத
தாடி. சடைத்தலை இடுப்பில் லுங்கி.
“யாரு வேனும் ” இந்த பாஷையே வேறு
கோவில் குருக்களப்யா இல்லை ?”
கதவு இன்னும் கொஞ்சம் கூடத்திறந்தது. ‘'பட்டர் காலமாகி பத்து மாத மாச்சே நீ யாரு ?”
இன்னொரு அதிர்ச்சி.
“அ ப் போ அவர் குடும்பம் ? .ெ ப ண் ணு ம் சம்சாரமும் ?” தயங்கினேன். -
பொண்ணும் சம்சாரமுமா ? சம்சாரமும் மாமி யாரும்னு சொல்லு. அவர் காலமான கையோடு அவங் களும்-அம்மாவும் .ெ ண் ணு ம்-ஊரை விட்டுப் போயிட்டாங்களே ? நீ யாரு ?”
இந்த ஆளின் குரலே பிடிக்கல்லே. இவன் குரலும், பேச்சும், மரியாதையில்லாத நீ'யும். ஆளையே பிடிக் கல்லே. என்னத்தை எதிர்பார்த்து வந்தேனோ ஏமாந்து போனேன். அதனால் எதுவுமே பிடிக்கவில்லை.
எங்கே போனாங்க ?’’
‘ என்னைக் கேட்டால் ?”
அடிமேல் அடி. திண்ணையில் உட்கார்ந்துவிட்டேன், எதிரே கோயில் மதிலோரம் யாரோ ஒருத்தி கூடை சாணியைப் பொத்தெனக் கொட்டினாள், வரட்டி அறைய கோவில் மதில்தான் கிடைத்ததாக்கும். சீ-எதுவுமே பிடிக்கல்லே,