இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வ.காே.சண்முகம்
82
திசைகளின் கூத்து!
எடுப்பு :
இன்றொரு நாளும் பூத்ததடா! - வாழ்வாம்
இன்கனித் தோட்ட பாத்தியிலே...
(இன்றொரு நாளும்)
தாெடுப்பு :
கன்றாய் நட்ட அறத்தின் கொடியில் - அதன்
காப்பாய் இட்ட கருணையின் மடியில்...
(இன்றொரு நாளும்)
முடிப்பு :1
காலமாம் புயலின் கைகளில் விழாமல்
கயமையாம் வெயிலின் சூட்டினில் படாமல்
ஞாலமே தொழுதிடும் குறள்மறை போலே
நறுமணத் தென்றல் வருவதைப் போலே...
(இன்றொரு நாளும்)