கலையில் இலட்சியமும் வீரனும்
37
களில் ஈடுபாடும் கொண்டு, மக்களுக்காகத் தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணிப்பவனே வீரன்.
எக்காலத்திற்கும் பொருத்தமான இலட்சியம் எதுவுமே கிடையாது. இலட்சியங்கள் வளர்ச்சியடைந்து மாறுகின்றன. கார்க்கி, ஓர் இலட்சியம், மற்றோர் இலட்சியத்தால் மாற்றப்படுவது குறித்துப் பின்வருமாறு கூறுகிறார்:
யதார்த்தம் என்பதே மனிதக் குறிக்கோள்களின் புறவயமான வெளிப்பாடுதான். நிகழ்கால நடப்பு, குறிக்கோளைப் பின்பற்றி மனிதன் செயல்படுவதால் மாற்றப்படுகிறது. மாற்றப்பட்ட நடப்பு நிலையில் குறிக்கோள் நமக்குத் திருப்தியளிக்காவிடில், குறிக்கோளையும் நாம் மாற்றிக்கொள்கிறோம். நடப்பு, கற்பனையை மாற்றுகிறது. இவ்வாறு குறிக்கோள்கள் வளர்ந்து மாறுகின்றன.
மாறாத, என்றும் உள்ள குறிக்கோள்கள், எல்லாக் காலத்திற்கும், எல்லா வர்க்கங்களுக்குமாக இருப்பதில்லை.
எழுத்தாளன் தனது வாழ்க்கையனுபவத்தில் இருந்து - வீரனது அம்சங்களைத் தேர்ந்தெடுத்து வீரப் படிமத்தைப் படைக்கிறான். அப்படிமத்தின் உயிரின் சாரமாகக் குறிக்கோள் ஒளிர்கிறது. கார்க்கி எழுதுகிறார்: