உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


இரண்டாவது அதிகாரம்


புவனசுந்தரியின் இளம் பருவம்

ங்ஙனம் எல்லா சாமான்களையும் முன் போல் ஒழுங்காக வைத்து விட்டு, அம்மங்கை எனக்குச் சிறிது தூரத்தில் எதிரே உட்கார்ந்த வண்ணம், “ஐயா! என் கதையை ஆரம்பிக்கலாமா?” என்று கேட்டாள்.

“ஆஹா! தாராளமாய்” என்று உற்சாகத்தோடு சொன்னேன். இங்கு வாசகர்களுக்கு ஒரு விஷயத்தை குறிப்பிட விரும்புகிறேன். நான் அம்மங்கையைப் பார்த்தது முதல் இவ்வளவு நேரமாகப் பேசி வந்தது வரை, அவள் ஆடவனாகிய என்னோடு தனியாகப் பேசுவதைப் பற்றி நாணமோ அல்லது அச்சமோ ஆகிய எவ்வித உணர்ச்சியையுங் கொள்ளவேயில்லை. சாதாரணமாக, ஓர் ஆடவனோடு மற்றொரு ஆடவனோ, ஒரு மங்கையோடு மற்றொரு பெண்ணோ பேசுவது போலவே, யாதொரு வேற்றுமையுமின்றிப் பேசினாள்; பழகினாள் என்றே சொல்ல வேண்டும். இது எனக்கு ஒரு பெரிய வியப்பையுண்டு பண்ணியது. பெண்களுக்குரிய அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய நாற்குணமும், இவளுக்கு—சமூகத்தை விட்டு வெளியேறியிருப்பதால்—அற்று விட்டதோ என்றும் எண்ணினேன்.

அம்மங்கையினது கடைசிக் கேள்விக்கு நான் பதிலளித்ததும், அவள் சிறிது நேரம் அமைதியாக இருந்தாள். இப்போது அவள் முகத்தில் துயரங் குடிகொண்டது. இம்மாறுதலை, வானத்தில் நன்றாகப் பிரகாசித்துக் கொண்டிருந்த