இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
438 தமிழர் நாட்டுப் பாட ல்கள் பெண்:மளுக்கிட்ட கம்பிடிச்சி
கொளுக்கிட்டட வெச்சி தாரேன் வாடா என் சாமி
ஆண்:கொளுக்கிட்ட தின்னாலே
தண்ணி தாகம் எடுக்கும் போடி பொண் மயிலே
பெண்:தண்ணி தாகம் எடுத்தா
நீரு மோரு தாரேன் வாடா என் சாமி
ஆண்:நீரு மோரு குடிச்சா
நித்திரையும் வந்திடும் போடி பொண் மயிலே
பெண்: நித்திரையும் வந்தா
தட்டி எழுப்பரேன் வாடா என் சாமி
ஆண்: தட்டி எழுப்பினால்
காலை பொறக்கும் போடி பொண் மயிலே
பெண்: காலை பொறந்தா
கீரை வெரைக்கலாம் வாடா என் சாமி
ஆண்: வேலி கட்டினால்
வெள்ளாடு தாண்டும் போடி பொண் மயிலே
பெண்: வெள்ளாடு தாண்டினா
பாலு கறக்கலாம் வாடா என் சாமி
ஆண்: பாலு கறந்தா
பூனை குடிக்கும் போடி பொண் மயிலே
பெண்: பூனைக் குடிச்சா
பூனையை அடிக்கலாம் வாடா என் சாமி