பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

438 தமிழர் நாட்டுப் பாட ல்கள் பெண்:மளுக்கிட்ட கம்பிடிச்சி

     கொளுக்கிட்டட வெச்சி தாரேன் 
     வாடா என் சாமி

ஆண்:கொளுக்கிட்ட தின்னாலே

     தண்ணி தாகம் எடுக்கும் 
     போடி பொண் மயிலே

பெண்:தண்ணி தாகம் எடுத்தா

      நீரு மோரு தாரேன் 
      வாடா என் சாமி

ஆண்:நீரு மோரு குடிச்சா

     நித்திரையும் வந்திடும் 
     போடி பொண் மயிலே

பெண்: நித்திரையும் வந்தா

          தட்டி எழுப்பரேன் 
          வாடா என் சாமி

ஆண்: தட்டி எழுப்பினால்

          காலை பொறக்கும் 
          போடி பொண் மயிலே

பெண்: காலை பொறந்தா

         கீரை வெரைக்கலாம் 
         வாடா என் சாமி

ஆண்: வேலி கட்டினால்

         வெள்ளாடு தாண்டும் 
         போடி பொண் மயிலே

பெண்: வெள்ளாடு தாண்டினா

          பாலு கறக்கலாம் 
          வாடா என் சாமி

ஆண்: பாலு கறந்தா

         பூனை குடிக்கும் 
         போடி பொண் மயிலே

பெண்: பூனைக் குடிச்சா

         பூனையை அடிக்கலாம் 
         வாடா என் சாமி