21 சலோம்
பெருந்திரளான கூட்டம் அவனைப் பின் தொடர்வது வழக்கம். அவனுக்குத் தொண்டர்களும் இருந்தார்கள்.
காப்படோசியன் :
என்ன சொல்லுகிறான் ?
முதல் வீரன் :
நமக்குத் தெரியாது. சிற்சில சமயத்திலே அஞ்சத்தக்க சொற்களைச் சொல்லுகிறான். ஆனால், அவன் சொல்லுவதைப் புரிந்து கொள்வது கடினம்.
காப்படேசியன் :
அவனைப் பார்க்கலாமா?
முதல் வீரன் :
கூடாது என்பது மன்னன் ஆணை.
சிரியா வாலிபன் :
இளவரசி விசிறியால் முகத்தை மறைத்துக் கொண்டு இருக் கிறாள். அவளுடைய வெண்மையான சிறிய கைகள், கூடு களுக்குப் பறந்து செல்லும் புறாக்களைப்போல, சிலிர்த்து ஆடிக் கொண்டு இருக்கின்றன.
மன்னியின் பணியாள் :
என்ன செயல் செய்கிறாய் ? ஏன் அவளைப் பார்க்கிறாய்? நீ அவளைப் பார்க்கக் கூடாது..... அஞ்சத்தக்க நிகழ்வு ஏதாவது நிகழலாம்.
காப்படோசியன் :
(சிறையைச் சுட்டிக்காட்டி) என்ன வியத்தகு சிறை!
முதலாவது வீரன் :
உடல் நலத்துக்கு மிக்க கேடாய் இருக்கும்.