இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஆகார் ஒயில்ட்டு 26
அடிமை :
இளவரசி, விருந்திற்கு வருமாறு மன்னர் உங்களை வேண்டுகிறார்.
சலோம் :
நான் வரமாட்டேன்.
சிரியா இளைஞன் :
இளவரசி, என்னை மன்னியுங்கள் தாங்கள் விருந்திற்குப் போகாவிடில் ஏதாவது கேடு நிகழலாம்.
சலோம் :
இந்த முற்றுணர்ந்தோன் முதியவனா ? சிரியா இளைஞன் :
இளவரசி விருந்திற்குப் போவதுதான் நல்லது. தங்களை
அழைத்துக் செல்லட்டுமா?
சலோம் :
இந்த அறிவன் ....இவன் என்ன, முதியவனா?
முதல் வீரன் :
இல்லை, இளவரசி, அவன் மிக்க இளைஞன். இரண்டாவது வீரன் :
உறுதியாகச் சொல்ல முடியாது. இவனே இலியாசு என்றும் சிலர் சொல்லுகிறார்கள்.
சலோம் :
இலியாசு என்பவன் யார்? இரண்டாவது வீரன் :
வெகு காலத்திற்கு முன்னால் இந்த தேசத்திலே தோன்றிய முற்றுணர்ந்தோன் இளவரசி.