இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
* கம்பத்தில் உள்ளானோ அடா
காட்டுன்றன் கடவுளைத் துணிடத்தே
வம்புரை செய்மூடா- என்று
மகன் மிசையுறுமி அத்துாணுடைத்தான்
செம்பவிர் குழலுடையான்- அந்தத்
தீய வல்லிரணியனுடல் பிறந்தாய்
நம்பி நின்னடி தொழுதேன்- என்னை
நானழியாதிங்குக் காத்தருள் வாய்.
- வாக்கினுக்கீசனையும்- நின்றன
வாக்கினி வசைத்திடும்
வலிமையினால்
ஆக்கினை காத்துடையாய்- என்றன்
அன்புடை எந்தை என்னருட்கடலே!
நோக்கினிற் கதிருடையாய்- இங்கு
துற்றுவர் கொடுமையைத் தவிர்த்
தருள்வாய்
-தேக்கு நல்வானமுதே இங்குச்
சிற்றிடை பாய்ச்சிலில் வெண்னெ
யுண்டாய்
- வையகம் காத்திடுவாய்- கண்ணா
மணிவண்ணா, என்றன் மனச்
சுடரே
ஐயநின் பதமலலே சரண்
ஹரி, ஹரி, ஹரி, ஹரி, ஹரி என்றாள்
50