இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
6
விதவை உலகில்
வெண்மதியில் தண்மையுண்டு; வீசும் தென்றல்
- விளைவிக்கும் நல்லின்பம்; அவளி டத்தும்
பெண்மையுண்டு, பருவஎழில் நிறைய உண்டு.
- பேசுமொழி கிள்ளே என்பர், இருந்தும் அன்னுள்
பெண்மைநலம் காணுகிலாள், விதவை என்று
- பெயர்வைத்துக் கொல்லுகின்றர், உலகைக் காணக்
கண்ணிருந்தும் குருடாகிக் கண்ணிர் சிந்திக்
- கயிறில்லாப் பம்பரம்போல் பாழாய் நின்ருள்
7
தொழில் உலகில்
வித்திட்டுப் பயிர்செய்து விளைச்சல் கண்டான்,
- விதவிதமா ளிகைபலவும் ஆக்கித் தங்தான்,
முத்துக்குக் கடல்மூழ்கிப் பிழைத்து வந்து
- முதலாளி உலகுக்கே ஒளியைத் தங்தான்,
புத்துக்குள் கைநீட்டும் செயல்போல் மண்ணுள்
- பொன்னுக்கு நுழைகின்றன், அவர்கள் எல்லாம்
மத்திட்ட தயிர்போல நெஞ்சு டைந்து
- வாழ்வின்றிக் கண்ணிரைச் சிந்து கின்ருர்
8
பொதுவாழ்வில்
இவ்வண்ணம் மக்கள்படும் துயரம் நோக்கி
- இவைநீக்கி நலங்கண்டு வாழ்வ தற்குச்
செய்வண்ணம் யாதென்று சிந்தித் தாய்ந்து
- செயல்செய்ய அல்லலுற்று, மக்கள் இன்னும்
உய்வண்ணம் உணர்ந்திலரே என்று கண்ணிர்
- உகுக்கின்ருர் நல்லறிஞர்; இன்னும் சில்லோர்
கைவண்ணம் பலகாட்டித் தாமே வாழக்
- காசினியில் வடிக்கின்ரறர் முதலைக் கண்ணிர்
186