பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



6

விதவை உலகில்

வெண்மதியில் தண்மையுண்டு; வீசும் தென்றல்

விளைவிக்கும் நல்லின்பம்; அவளி டத்தும்

பெண்மையுண்டு, பருவஎழில் நிறைய உண்டு.

பேசுமொழி கிள்ளே என்பர், இருந்தும் அன்னுள்

பெண்மைநலம் காணுகிலாள், விதவை என்று

பெயர்வைத்துக் கொல்லுகின்றர், உலகைக் காணக்

கண்ணிருந்தும் குருடாகிக் கண்ணிர் சிந்திக்

கயிறில்லாப் பம்பரம்போல் பாழாய் நின்ருள்

7

தொழில் உலகில்

வித்திட்டுப் பயிர்செய்து விளைச்சல் கண்டான்,

விதவிதமா ளிகைபலவும் ஆக்கித் தங்தான்,

முத்துக்குக் கடல்மூழ்கிப் பிழைத்து வந்து

முதலாளி உலகுக்கே ஒளியைத் தங்தான்,

புத்துக்குள் கைநீட்டும் செயல்போல் மண்ணுள்

பொன்னுக்கு நுழைகின்றன், அவர்கள் எல்லாம்

மத்திட்ட தயிர்போல நெஞ்சு டைந்து

வாழ்வின்றிக் கண்ணிரைச் சிந்து கின்ருர்

8

பொதுவாழ்வில்

இவ்வண்ணம் மக்கள்படும் துயரம் நோக்கி

இவைநீக்கி நலங்கண்டு வாழ்வ தற்குச்

செய்வண்ணம் யாதென்று சிந்தித் தாய்ந்து

செயல்செய்ய அல்லலுற்று, மக்கள் இன்னும்

உய்வண்ணம் உணர்ந்திலரே என்று கண்ணிர்

உகுக்கின்ருர் நல்லறிஞர்; இன்னும் சில்லோர்

கைவண்ணம் பலகாட்டித் தாமே வாழக்

காசினியில் வடிக்கின்ரறர் முதலைக் கண்ணிர்

186