இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
16
பாவேந்தர் வழங்கிய கொடை
எண்சீர் விருத்தம்
பூவேந்தர் வழங்குகொடை காலப் போக்கிற்
போய்மறையும் நிலைமைத்தாம்; பெருமை சான்ற நாவேந்தர் வழங்குகொடை கால மெல்லாம்
நலம்பயந்து நிலைத்திருக்கும்; பாண்டி தந்த பாவேந்தன் வழங்குகொடை கவிக்கு லத்துப்
பரம்பரையாய்த் தலைமுறைகள் தோறும் நிற்கும்; சாவேந்திப் போனபினும் தழைத்து நிற்கும்
தகைமைத்தாம் அக்கவிஞன் தந்த செல்வம். 1
பாவேந்தன் வழங்குகொடைப் பெருமை எல்லாம்
பகுத்தெடுத்து வகைப்படுத்திச் சிறப்பை எல்லாம் நாவேந்திப் பாடுதற்கு யாரால் ஒல்லும்?
நாளொன்று போதுவதோ? பலநாள் வேண்டும்; கோவேந்தர் போலஎழில் தோற்றங் கொண்டோன்
கொடைசொல்லக் காவியங்கள் பலவும் வேண்டும்; பூவேந்தும் நறவமென இனிக்கும் செஞ்சொற்
புரட்சிப்பாக் கொடைஞனவன் கொற்றம் வாழ்க. 2