பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

பாவேந்தர் வழங்கிய கொடை

எண்சீர் விருத்தம்

பூவேந்தர் வழங்குகொடை காலப் போக்கிற்

போய்மறையும் நிலைமைத்தாம்; பெருமை சான்ற நாவேந்தர் வழங்குகொடை கால மெல்லாம்

நலம்பயந்து நிலைத்திருக்கும்; பாண்டி தந்த பாவேந்தன் வழங்குகொடை கவிக்கு லத்துப்

பரம்பரையாய்த் தலைமுறைகள் தோறும் நிற்கும்; சாவேந்திப் போனபினும் தழைத்து நிற்கும்

தகைமைத்தாம் அக்கவிஞன் தந்த செல்வம். 1

பாவேந்தன் வழங்குகொடைப் பெருமை எல்லாம்

பகுத்தெடுத்து வகைப்படுத்திச் சிறப்பை எல்லாம் நாவேந்திப் பாடுதற்கு யாரால் ஒல்லும்?

நாளொன்று போதுவதோ? பலநாள் வேண்டும்; கோவேந்தர் போலஎழில் தோற்றங் கொண்டோன்

கொடைசொல்லக் காவியங்கள் பலவும் வேண்டும்; பூவேந்தும் நறவமென இனிக்கும் செஞ்சொற்

புரட்சிப்பாக் கொடைஞனவன் கொற்றம் வாழ்க. 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/91&oldid=571697" இலிருந்து மீள்விக்கப்பட்டது