இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
67
பாரி மலை யருகில் - நல்ல
பண்பினர் வா ழிடமாம்
ஊரில் ஒரு பொழிலில் - உனை நான்
உற்றறி நாள் முதலே
மீறிய கா தலினால் - தமிழே
மெய்ம்மறந் தே உழல்வேன்
கூரிய நின் விழியால் - எனை நீ
கொல்வது தான் சரியோ
ஆசை மனத் திரையில் - எண்ணம்
அத்தனை யுங் கலந்து
பாச முடன் எழுதி - உருவைப்
பார்த்து மகிழ்ந் திருப்பேன்
பேச மன மிலையேல் - உயிரைப்
பிய்த்தெனைக் கொன் றுவிடு
மோசம் புரி வதென்றால் - என்றன்
மூச்சை நிறுத் திவிடு
உன்னைப் பெறு வதற்கே - இங்குநான்
ஓடித் திரி வதெல்லாம்
என்னைப் புறக் கணித்தால் - உயிரை
எப்படி நான் சுமப்பேன்
உன்னெழிற் கா தலன்றோ - என்னை
உன்மத் தனாக் குதடி
கன்னற் சுவை மொழியே - என்னைக்
கட்டி யணைத் திட்டி