கேள்வி நேரம்/8

விக்கிமூலம் இலிருந்து

இடம் : சென்னை, அண்ணாநகர்

கேள்வி கேட்பவர் :

அலமேலு அழகப்பன்.

பங்கு பெறுவோர் :

எஸ். ஜெயா, பி. கிரிசங்கர்

பி. கே. சரவணன்.

அலமேலு : கோனார் உரைநூல் என்றால் உங்களுக்கு நன்றாகத் தெரியும். கோனார் என்கிறார்களே, அவருடைய முழுப் பெயர் தெரியுமா ?

சரவணன்: தெரியும் அக்கா. ஐயன் பெருமாள் கோனார்

அலமேலு: சரியான விடை. அவர் திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தார், இப் போது இங்கிலீஷிற்குக்கூட, கோனார் நோட்ஸ்' இருக்கிறதா என்று சில மாணவர்கள் கேட்கிறார்கள்! அந்த அளவுக்கு அவர் பெயர் பிரபலமாகியிருக்கிறது!... மகாத்மா காந்தி நடத்திய பத்திரிகைகளின் பெயர்களைக் கூற முடியுமா ?

கிரிசங்கர்: ஹரிஜன் பத்திரிகை

அலமேலு : உம்... இன்னும் சில பத்திரிகைகளையும் அவர் ஆசிரியராயிருந்து நடத்தியிருக்கிறாரே !

சரவணன்: யங் இந்தியா'... நவஜீவன்'.

அலமேலு: சரி... இந்தியாவில் அவர் நடத்திய மூன்று பத்திரிகைப் பெயர்களையும் கிரியும் சரவணனும் சேர்ந்து கூறி விட்டார்கள். ஆனால், தென் ஆப்பிரிக்காவில் அவர் இருந்த போது, ’இந்தியன் ஒப்பீனியன்’

என்று ஒரு பத்திரிகையை நடத்தினார். அதுதான் அவருடைய முதல் பத்திரிகை, சர் ஜசக் என்று தொடங்கும் பெயர்களில் இரண்டு பேர் உலகப் புகழ் பெற்றிருக் கிறார்கள். அவர்களின் பெயர்கள் தெரியுமா ?

ஜெயா : சர் ஐசக் கியூட்டன். புவி ஈர்ப்புச் சக்தியைக் கண்டுபிடித்தவர். இன்னொருவர்... இன்னொருவர்....

அலமேலு: தலையைச் சொறிகிறாயே, சரி வேறு யாருக்காவது தெரியுமா ?

எல்லோரும் : (மெளனம்).

அலமேலு : இன்னொருவர் சர் ஐசக் பிட்மென். பிட்மென், சுருக்கெழுத்துக் கண்டு பிடித்தவர். பிட்மென் ஷார்ட் ஹாண்ட் (Pitman's shorthand) என்று கேள்விப்பட்டிருப்பீகளே! சரி, யூக்கலிப்டஸ் அதாவது நீல கிரித் தைலம் என்கிறோமே, அந்தத் தைலத்தை எதிலிருந்து எடுக்கிறார்கள்?

ஜெயா : யூக்கலிப்டஸ் மரப் பட்டையிலிருந்து.

அலமேலு : இல்லை, ஜெயா விடை தவறு.

கிரி : யூக்கலிப்டஸ் இலையிலிருந்துதான் தைலம் எடுக்கிறார்கள்.

3085-6

அலமேலு: ஆம், கிரி சொன்னதே சரி. யூக்கலிப்டஸ் மரத்திலிருந்து இலைகளைப் பறித்து ஒரு பெரிய பாத்திரத்திலே போட்டு, அதிலே நீர் விட்டுக் காய்ச்சு வார்கள். அப்போது பாத்திரத்திலிருந்து குபுகுபுவென்று ஆவிவரும். அந்த ஆவியைச் சேகரித்துக் குளிர வைப்பார்கள். அதுதான் நீலகிரித் தைலம்...இதோ இங்கு நான்கு பிராணிகள் இருக்கின்றன. நத்தை, தவளை, கரப்பான்பூச்சி, பாம்பு இந்த நான்கிலே இரண்டு ஒரு வகையைச் சேர்ந்தவை. மற்ற இரண்டும் வேறொரு வகையைச் சேர்ந்தவை. கண்டுபிடிக்க முடிகிறதா?

சரவணன்: கத்தையும், தவளையும் நீரில் வசிப்பவை, கரப்பான் பூச்சியும் பாம்பும் நிலத்தில் வசிப்பவை.

அலமேலு: சரவணா, நீ சொன்னது சரியான விடையில்லை. பாம்பில் கூடத்தான் தண்ணிர்ப் பாம்பு இருக்கிறது. வேறு யாருக்குத் தெரியும்?

ஜெயா : எனக்குத் தெரியும். பாம்புக்கும் தவளைக்கும் முதுகு எலும்பு உண்டு; நத்தைக்கும் கரப்பானுக்கும் முதுகு எலும்பு இல்லை.

அலமேலு: ஆஹா ஜெயா எவ்வளவு சரியாய்ச் சொல்லிவிட்டாள்! சரி, Unicef என்றால் என்ன?

கிரி : அடிக்கடி டி. வி. யில் காட்டுகிறார்கள். United Nations international Children’s Fund என்பதைத்தான் அப்படிச் சுருக்கிச் சொல்கிறார்கள்.

அலமேலு : கிட்டத்தட்டச் சரியாகச் சொல்லி விட்டாய். கிட்டத்தட்ட' என்று ஏன் சொல்கிறேன், தெரியுமா? நீ சொன்ன ஒவ்வொரு சொல்லிலும் முதல் எழுத்தை எடுத்துக்கொண்டால் Unicf என்றுதானே வரும்? 'E' என்ற எழுத்து விடுபட்டுப் போகிறதே!

கிரி : ஆமாம் அக்கா. இதோ நான் சரியாய்ச் சொல்கிறேன். United Nations international Children's Emergency Fund.

அலமேலு : கரெக்ட். ஆனாலும் Emergency என்பதை மட்டும் பிராக்கெட்டுக்குள் அதாவது அடைப்புக் குறிக்குள் போடுகிறார் கள். ஐக்கிய நாடுகளின் சர்வதேசக் குழந்தை

களின் அவசரத் தேவைக்கான நிதி என்று அர்த்தம். யுத்தத்தால் அவதிப்படும் நாட்டுக் குழந்தைகளுக்கு இது மிகவும் உதவி வருகிறது...முதல் முதலில் இந்தியாவில் மின்சார ரயில் எங்கு விடப்பட்டது ?

ஜெயா : பம்பாயில்.

அலமேலு: ஆம். பம்பாயிலிருந்து குர்லா என்ற இடத்துக்கு முதல் முதலாக 1925-ஆம் ஆண்டு மின்சார வண்டி விடப்பட்டது. மெட்ரிக் முறையைத்தான் இப்போது நாம் எல்லோரும் கையாண்டு வருகிறோம். இந்த முறையைக் கண்டுபிடித்தவர் யார்?

கிரி : ஒரு பிரெஞ்சுக்காரர்....பெயர்......தெரிய வில்லை.

அலமேலு : வேறு யாரேனும் சொல்வீர்களா?

எல்லாரும் (மெளனம்).

அலமேலு : நானே சொல்கிறேன். அதைக் கண்டு பிடித்தவர் ஒருவரல்லர், ஏழு பிரெஞ்சுக்காரர்கள் அடங்கிய ஒரு குழுதான் கண்டு பிடித்தது. அந்த ஏழு பேரும் சேர்ந்து ஒன்பது ஆண்டுகளில் கண்டுபிடித்தார்கள். 1790 முதல் 1799 வரை...'சுவரை வைத்துத் தான் சித்திரம் எழுத வேண்டும்' என்று ஒரு பழமொழி இருக்கிறதே, அது எப்படி வந்தது?

சரவணன்: முன் காலத்தில் அநேகமாக ஒவியங்களை யெல்லாம் சுவர்களிலே எழுதினார்கள். அதனால்தான் அந்தப் பழமொழி.

அலமேலு : உண்மைதான். முன்காலத்தில் பெரும்பாலும் சுவர்களில்தான் சித்திரங்கள் எழுதப்பட்டன. கோயில்கள், அரண்மனைகள், சித்திர மாடங்கள் இப்படி எல்லாவற்றிலும் சுவர் ஒவியங்கள் எழுதப்பட்டன. ஆனால் இப்போதுதான் துணிகளிலும் தாள்களிலும் பலகைகளிலும் சித்திரங்களை வரைகிறார்களே!...நேரு மாமாவின் கூடப் பிறந்த இரண்டு சகோதரிகளின் பெயர்கள் தெரியுமா?

ஜெயா: ஒருவர் பெயர் விஜயலட்சுமி பண்டிட்... இன்னொருவர் பெயர்...சுசேதா கிருபலானி.

அலமேலு : ஜெயா, முதலில் சொன்ன பெயர் சரிதான். ஆனால், இரண்டாவது பெயர் தவறு.

கிரி : நான் சொல்கிறேன். கிருஷ்ணா.

அலமேலு : கிருஷ்ணா என்பது சரிதான். ஆனால், அவரது முழுப் பெயர் திருஷ்ணா ஹத்திசிங், மக்காவிற்குப் புனித யாத்திரை சென்று வந்தவர்களுக்கு ஒரு பட்டம் வழங்கப் படுகிறது. அது என்ன பட்டம் !

சரவணன்: ஹாஜி என்ற பட்டம்தானே?

அலமேலு: ஆம், சரியான விடை சுத்தத் தங்கம் எத்தனை காரட் எடையுள்ளது?

ஜெயா : 24 காரட்.

அலமேலு : கரெக்ட். எவரெஸ்ட் சிகரத்தை எட்டிப் பிடித்து வெற்றிக்கொடி காட்டியவர்கள் டென்சிங்கும், ஹில்லரியும் என்பது நமக்குத் தெரியும். ஆனால், அதற்குப் பிறகு, இருமுறை எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தவர் யார் என்று தெரியுமா?

எல்லாரும் (மெளனம்).

அலமேலு: ஒருவருக்கும் தெரியாதா நவாங் கொம்பா என்பவர் 1963, 1965 ஆகிய இரு ஆண்டுகளில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந் திருக்கிறார். அவரும் டென்சிங் இனத்தைச் சேர்ந்தவர்தான்......இதோ இந்தப் படத்தைப் பாருங்கள். இதில் இருப்பது என்ன என்று தெரிகிறதா?

சரவணன்: ஓ, நன்றாகத் தெரிகிறதே, இதுதான் விசைக் காற்றாடி.

ஜெயா : ஐயையோ விசைக் காற்றாடி இப்படியா இருக்கும்? காற்றாடியிலே நீளநீளத் தகடு இருக்குமே!

கிரி : இது. ராடார் கருவி.

அலமேலு : கரெக்ட். ஒரு பொருளின் இருப்பிடத்தையும் தூரத்தையும், ரேடியோ அலைகளைக்கொண்டு அறிவதற்குப் பயன்படும் ராடார் கருவிதான் இது. முன்பெல்லாம் கோயில் கட்டடங்கள் செங்கற்களாலே கட்டப்பட்டிருக்கும். பிறகுதான் கருங்கற்களைக் கொண்டு கட்டினார்கள். முதல் முதலாகக் கருங்கற்களால் கட்டப்பட்ட கோயில் எது, தெரியுமா?

சரவணன் : அந்தக் கோயில் காஞ்சிபுரத்தில் இருக்கிறது. ஏகாம்பரநாதர் என்று நினைக்கிறேன்.

அலமேலு : காஞ்சிபுரம் என்பது சரியே. ஆனால். ஏகாம்பரநாதர் கோயில் என்பது தவறு.

ஜெயா: கைலாசநாதர் கோயில்.

அலமேலு: ஆம், கைலாசநாதர் கோயில்தான் முதன் முதலாக அமைக்கப்பட்ட கற்றளிக் கோயில். இந்திய அரசு அளிக்கின்ற விருது

களில் மிகவும் உயர்ந்தது. பாரத ரத்னா. அடுத்த மூன்றைக் கூறுங்கள், பார்க்கலாம்.

கிரி: பத்மவிபூஷண், பத்மசிறீ, பத்மபூஷண்.

அலமேலு: சரிதான். ஆனாலும், இடம் மாறி இருக்கின்றன. பத்மவிபூஷண். அதற்கு அடுத்தது பத்மபூஷண், அதற்கும் அடுத்தது பத்மசிறீ... அந்தமான், நிகோபார் தீவுகள் என்கிறார்களே, அவற்றில் மொத்தம் எத்தனை தீவுகள் இருக்கின்றன?

ஜெயா: இரண்டு தீவுகள். ஒன்று அந்தமான்; இன்னொன்று நிகோபார்.

அலமேலு: தவறு, தவறு.

சரவணன்: ஒவ்வொன்றிலும் பல தீவுகள் இருக்கின்றன. எத்தனை எத்தனை என்று சரியாகத் தெரியாது.

அலமேலு: சரி, நானே சொல்லிவிடுகிறேன். அந்தமானில் 205 தீவுகள், நிகோபாரில் 19 தீவுகள். மொத்தம் ..

ஜெயா: 224 தீவுகள்.

அலமேலு: ஆம். இந்த 224 தீவுகளும் சேர்ந்ததுதான் அங்தமான், நிகோபார் தீவுகள். பெரு நகரம்-அதாவது மெட்ரோபாலிடன் சிட்டி என்கிறார்களே, எந்த மாதிரி நகரத்தை அப்படிச் சொல்லுகிறார்கள்?

சரவணன்: 10 லட்சம் மக்களுக்கு மேல் இருந்தால் அந்த நகரத்தை மெட்ரோபாலிடன் சிட்டி என்கிறார்கள்.

அலமேலு : வெரிகுட் மிகவும் சரியாகச் சொன்னாய்...நம் தேசத்தில் ஐந்தாண்டுத் திட்டம் என்று ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் அபிவிருத்தித் திட்டம் தயாரிக்கிறார்களே, இதை முதலில் துவக்கியது எந்த நாடு?

கிரி: அமெரிக்கா.

அலமேலு : இல்லை.

சரவணன் : ரஷ்யா.

அலமேலு : ஒஹோ! அமெரிக்கா இல்லை என்றால் ரஷ்யாவா? எப்படியோ சரியான விடையைச் சொல்லிவிட்டாய். ரஷ்யாவில் தான் 1928-ல் ஐந்தாண்டுத் திட்டம் துவங்கப் பெற்றது...சென்னை நகருக்கு வீராணம் என்ற ஏரியிலிருந்து தண்ணீர் கொண்டு வர ஒரு திட்டம் இருந்தது. அந்த ஏரி எங்கே இருக்கிறது?

ஜெயா : சிதம்பரத்துக்குப் பக்கத்திலே.

அலமேலு : ஆம், தென் ஆர்க்காட்டில் சிதம்பரம் வட்டத்திலே இருக்கிறது. இந்த ஏரி கடலைப் போல நீளமாகவும், விரிவாகவும் இருக்கும். தமிழ் நாட்டிலேயே மிகப் பெரிய ஏரி

இதுதான்...மறைமலை அடிகள் மிகப் பெரிய தமிழறிஞர் என்பது உங்களுக்குத் தெரியும். அவருடைய இயற்பெயர் என்ன?

சரவணன்: வேதாசலம்.

அலமேலு: சரியான விடை. வேதம் = மறை, அசலம் = மலை. இரண்டையும் சேர்த்தால் மறைமலை. அவரை சுவாமி வேதாசலம் என்று பலரும் மரியாதையோடு அழைத்து வந்ததால், மறைமலை அடிகள் என்று பின்னர் அழைத்தார்கள்...ஐதராபாத் எங்கே உள்ளது என்று கேட்டால், ஆந்திர மாநிலத்தில் என்று உடனே கூறி விடுவீர் கள். இன்னோரிடத்திலும் ஐதராபாத் என்ற பெயரில் ஒரு நகரம் இருக்கிறது. எங்கே என்று தெரியுமா?

எல்லாரும் : (மெளனம்)

அலமேலு: ஒருவருக்கும் தெரியவில்லையே! பாகிஸ்தானில் சிந்து நதியின் மேற்குக் கரைக்கு அருகிலே ஒரு குன்று இருக்கிறது. அதன் மேல்தான் இருக்கிறது, இன்னொரு ஐதராபாத் நகரம்... காந்தி புராணம்' என்ற கவிதை நூலை ஓர் அம்மையார் பாடியிருக்கிறார். அவர் பெயர் தெரியுமா?

ஜெயா : செளந்தரா கைலாசம். அலமேலு இல்லை. ஒரு குறிப்புத் தருகிறேன். அந்த அம்மையாரின் முன்னால் பண்டிதை என்ற பட்டம் இருக்கும்.

சரவணன் : உம்........ கேள்விப்பட்டிருக்கிறேன். பண்டிதை அசலாம்பிகை அம்மையார்.

அலமேலு : சரியாகச் சொன்னாய். காந்தி புராணம் மட்டுமல்ல, திலகர் புராணம்’ என்று ஒரு புத்தகமும் எழுதியிருக்கிறார். இன்னும் பல தல புராணங்களும் எழுதியிருக்கிறார்.

கிரி சங்கர், நீ கப்பல் பார்த்திருக்கிறாயா ?

கிரி : ஒ, பார்த்திருக்கிறேனே! அலமேலு எப்போது பார்த்தாய் ! எங்கே பார்த்தாய் ?

கிரி: போன கோடை விடுமுறையிலேதான் நான் கப்பலைப் பார்த்தேன். மிகப் பெரிய கப்பல். உள்ளேயெல்லாம் கூட என்னை என் மாமா அழைத்துப் போய்க் காட்டினார்.

அலமேலு : ஒ, அப்படியா ! எங்கே பார்த்தாய் என்று கேட்டேனே ? கிரி : என் மாமா டில்லியில்தானே இருக்கிறார் ! கப்பலை டில்லியில்தான் பார்த்தேன். (மற்றவர்கள் சிரிக்கிறார்கள்.)

கிரி : (கோபமாக) ஏன் சிரிக்கிறீர்கள் !

அலமேலு : கிரி, கோபப்படாதே ! டில்லியில் கடலே கிடையாது. கப்பலை எப்படிப் பார்த்திருப்பாய் ! (மற்றவர்கள் மேலும் சிரிக்கிறார்கள்)

"https://ta.wikisource.org/w/index.php?title=கேள்வி_நேரம்/8&oldid=494078" இலிருந்து மீள்விக்கப்பட்டது