உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கேள்வி

விக்கிமூலம் இலிருந்து

52. கேள்வி

பிறர் கூறுவதற்குச் செவி சாய்க்கக் கற்றுக் கொள். தவறாய்ப் பேசுவோரிடமிருந்து கூட அறிவு பெறுவாய்.

-ப்ளூட்டார்க்

பிறர் மூளையோடு நம் மூளையைத் தேய்த்து ஒளி பெறச் செய்தல் நலம்.

-மாண்டேய்ன்

ஒருமுறை அறிவாளியுடன் சம்பாஷிப்பது ஒரு மாதம் நூல்களைப் படிப்பதைவிட அதிக நன்மை தருவதாகும்.

-சீனப் பழமொழி

காது நல்லதைத் தவிர வேறெதையும் அறிவிற் சேர்க்கா வண்ணம் எல்லாவித விஷயங்களையும் கேட்கப் பழகிக் கொள்ளல் நலம்.

-ஏராஸ்மஸ்

★ ★ ★