கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்/கல்வி நிலை

விக்கிமூலம் இலிருந்து



12. கல்வி நிலை

ஏதென்ஸ் மக்களின் சிறுவர்கள் எழுதவும் படிக்கவும் அறிந்திருக்க வேண்டுமென்பதை அரசாங்கம் எதிர்பார்த்து வந்தது. ஆனால், அதற்கு ஆவன செய்வதற்கு அவ்வளவு முனைந்து பாடுபட்டிலது. ஆண்கள் தாம் படிக்க வேண்டும் என்றும், பெண் கல்வி அத்துணை வேண்டற்பாலதன்று என்றும் எண்ணும் கொள்கையும் இவர்களிடையே நிலைத்திருந்தது. இஃது அவர்களது பிற்போக்கான எண்ணத்தைக் காட்டுகிறது. கல்வி இருபாலார்க்கும் பொதுவானது என்பதைச் சிந்தித்திலர். இதில் நம் தமிழ் நாடு முன்னணியில் இருந்தது. ஆண்களைப் போலவே பெண்களும் ஏற்றந் தாழ்வின்றிக் கல்வி கற்று அறிவுடையராய் இருந்தனர் என்பதைச் சங்க நூல்களிலும், இடைப்பட்ட காலத்து நூல்களிலும் நன்கு காணலாம்.

குடியரசு நாடாக ஏதென்ஸ் இருந்தும், கல்விக்காக இவ்வளவு அசட்டையாக இருந்தது சிறிது வருந்தத்தக்கதுதான். நாளடைவில் ஏதென்ஸ் நகரச் சிறுவர்கள் நாட்டுக் குடிமக்கள் ஆவர் என்பதை அரசியலார் சிறிதும் உணராதிருந்தனர். பெற்றோர்களே தம் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தைக் குறித்துக் கவலைகொள்ள வேண்டியிருந்தது. பிள்ளைகளிடமிருந்து ஆசிரியன்மார் பெற்ற ஊதியம் மிக மிகச் சிறிதே ஆகும். அந்தச் சிறு தொகையை வசூலிப்பதற்கும் கணக்காயர் பெரிதும் வருந்தியே பெறவேண்டிய நிலை இருந்தது. இதனை நோக்கத் தமிழ்நாடு நனி சிறந்ததாகும். தமிழ்நாடு,

“உறுபொருள் கொடுத்தும் கற்றல் நன்றே"

என்று கழறுகிறது; வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டா என்றும் கூறுகிறது. ஏதென்ஸ் நகரச் செல்வக்குடியினர் தம் மக்களைத் தனி ஆசிரியர்களிடம் ஒப்படைத்து, அப்பிள்ளைகளின் கல்வி அபிவிருத்திக்கானவற்றைக் கவனித்துக் கொள்ள ஏற்பாடு செய்திருந்தனர். அவ்வாசிரியர்கள் தம்மால் ஒப்புவிக்கப்பட்ட பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று, பள்ளி முடிகின்ற வரையில் காத்திருந்து மீண்டும் வீட்டிற்கு மிக எச்சரிக்கையுடன் அழைத்து வருவர். இந்த ஆசிரியர்கள் பிள்ளைகளிள் கல்வி முன்னேற்றத்தைக் குறித்து மட்டும் கவலே எடுத்துக் கொள்ளாது, சிறுவர்களின் பெருந்தன்மையான வாழ்விற்கு வேண்டிய வகை களில், அவர்களைப் பயிற்றுவிக்கும் பொறுப்பையும் ஏற்றவராய்த் திகழ்ந்தனர்.

பொதுவாக ஏதென்ஸ் நகரப் பிள்ளேகளின் படிப்பு ஆருவது வயதில் தொடங்கப்பட்டு பதின்காம் வயது வரையில் நீடிப்பதாகும். இந்த வயதிற்குள் இவர்கள் தம் ஆரம்பப் பள்ளிக்கூடப் பாடத்திட்டங்களை நன்கு பயின்றவர் ஆவர். மாணவ வர் இலக்கணப் பள்ளிக்கூடம் என்று அக்காலத்தில் குறிப்பிடப்பட்ட அப்புள்ளியில், அரக்குப் பலகை யில் இருப்பு எழுதுகோலால் எழுதும் பழக்கத்தை மேற்கொண்டு வந்தனர். நம் கிராமப் பள்ளிகளில் முன்பு மணலில் எழுதி வந்தனர் அன்றோ !

அதன்பின் அவர்கள் சொல்வதைத் தவறின்றிப் பலகையில் எழுதும் பயிற்சிபெற்று விடுகின்றார்கள்.

அதற்குப் பிறகு ஹோமர் போன்ற பெருங் கவிஞர்களின் பாடல்களை மனனம் பண்ணும் பயிற்சியில் ஈடுபட்டு விடுகின்றனர். தெரியாத கடினமான பாடற் பொருள்கள், ஆசிரியரால் தெளிவாகவும் மிகுந்த கருத்தோடும் விளக்கப்படும். சிறிது கணிதப் பயிற்சியும் அளிக்கப்பட்டு வந்தது.

எழுத்தோடு எண்ணின்றேல் என்ன பயன் ? எண்ணும் எழுத்தும் மக்கட்குக் கண் போன்றவை அல்லவோ? ‘எண்ணென்ப ஏனை எழுத்தென்ப, இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு’ என்பது பொது மொழி ஆயிற்றே?

இவ்வாறன பொதுக்கல்விப் பயிற்சியைப் பெற்றுக் கொண்டு வருகையில், மற்போர்ப் பயிற்சி அளிக்கும் பயிற்சிக் கூடங்களுக்கு எதினியர்களின் சிறுவர்கள் போகாமல் நிற்பதில்லை. அங்கு உடற்பயிற்சியும் இசை கலந்த நடனமும் பயில்விக்கப்பட்டு வந்தன. இவையே அன்றி அவர்களுக்குப் பல்வேறு உடற்பயிற்சிக்கான விளையாட்டுக்களும் கற்பிக்கப்பட்டு வந்தன. உடற்பயிற்சி ஆசிரியர் தம்பால் பயின்றுவரும் மாணவர்கள் உடற்கட்டில் உரமுடையவராய்த் திகழ வேண்டும் என்னும் ஒரே நோக்கம் கொண்டு, அம்முறையில் அவர்களைப் பயிற்றுவித்து வந்தனர்.

ஏட்டுக் கல்வியிலும், உடற்பயிற்சிக் கல்வியிலும் மாணவர்கள் தம் கருத்தை நன்கு செலுத்திக் கற்றுத் தேர்ச்சி அடைய வேண்டும் என்று அவ்வப் போது பந்தயங்களை வைத்து அவற்றில் நன்கு தேறியவர்களுக்குப் பரிசு வழங்கும் பான்மையும் அந்நாட்டில் இருந்து வந்தது. இதனால் மாணவர்கள் இவ்விரு கல்வியிலும் தம் கருத்தைச் செலுத்தி வர வாய்ப்பு ஏற்பட்டது. ஊக்கமும், உணர்ச்சியும் உடன் தோன்றின.

எளிய குடும்பத்து ஏழைப் பிள்ளைகள் தம் பதினான்காம் வயதிற்குமேல் படிக்கும் பொறுப்பைக் கைவிட்டுத் தம் பெற்றோர் மேற்கொண்டு புரியும் கைத்தொழிலை ஏற்க வேண்டிய நிலையை எய்துகின்றனர். ஆனால், செல்வக் குடியினர் தம் பிள்ளைகளைப் பதினெட்டு வயது வரை பயிலவிட்டு வைத்தனர். அதற்கு மேல் எந்தப் பிள்ளையும், செல்வர் என்றும், வறியர் என்றும் பாகு பாடின்றிப் போர்ப் பயிற்சியில் ஈடுபடவேண்டிய முறை கட்டாயமாக ஏதென்ஸ் நகர மக்களிடையே இருந்தது. இப்போர்ப்பயிற்சியை இரண்டு ஆண்டுகள் அவர்கள் பெறவேண்டும். செல்வச் சிறுவர்கள் பதினான்கு ஆண்டுக்குமேல் பதினெட்டு ஆண்டுவரை பெறும் கல்விப் பயிற்சியானது இசைப் பயிற்சியாகவோ அன்றிச் சித்திரம், ஓவியம் போன்ற நுண்கலைப் பயிற்சியாகவோ இருந்து வந்தது. இந்த ஏதென்ஸ் நகர மக்களின் கல்வி முறை உண்மையில் போற்றற்குரியதும் பாராட்டற்குரியதும் ஆகும்.

ஏதென்ஸ் நகர மக்கள் கையாண்ட நரம்புக் கருவி ஏழு நரம்புடையதாய் இருந்தது. புல்லாங்குழலும் அவர் போற்றி வந்த துளைக்கருவியாகும்.

தமிழர் பெரிதும் கையாண்ட யாழும் குழலும் இவர்கள் மேற்கொண்ட இசைக் கருவிகளை நினைப்பிக்கின்றன. ‘குழல் இனிது யாழ் இனிது என்ப என்று வள்ளுவரும் இவ்விரு கருவிகளையே வியந்து கூறுகிறார்.

ஏதென்ஸ் நகர இளைஞர்கள் தம் ஆரம்பப் படிப்பு முடிந்ததும் போர்ப் பயிற்சி பெறவேண்டும் என்பதை முன்னர் அறிந்தோம். அங்ஙனம் அவர்கள் நான்கு ஆண்டு பெற்ற போர்ப்பயிற்சி அவர்களை மேலும் தம் கல்வியறிவைப் பெருக்குவதற்கு உணர்ச்சியை ஊட்டி வந்தது என்று கூறலாம். இது பொதுத்தொண்டில் ஈடுபட்டு உயர்ந்த உத்தியோகங்களைப் பெற்றுத் தம் இசையை நாடத் தூண்டியது எனலாம். இவ்வாறு கல்வியால் புகழ்பெற விரும்பி நிற்பதை அறிந்து சிசிலியிலும், மற்றும் கிரேக்க நாட்டின் சில பகுதியிலும் உள்ள கல்விமான்கள் ஏதென்ஸ் நகருக்கு வந்து பல்வேறு பொருள்களைக்குறித்து ஆங்காங்குச் சொற்பொழிவு ஆற்றத் தலைப்பட்டனர்.

இதனால் நூலாகிய கருவிக் கொண்டே கல்வியைப் பெருக்கிக் கொள்ள வேண்டுமென்ப தின்றிச் சொற்பொழிவுகளைக் கேட்பதலுைம் அறின்வை விரிவுபடுத்திக் கொள்ளலாம் என்பது பெறப்படுகின்றதன்றோ? நம்மவர்களும் இதன் முற்றிலும் நம்பி இருந்தனர். இன்றேல் பெறப்படுகின்றதன்றோ?பெறப்படுகின்றதன்றோ பெறப்படுகின்றதன்றோ வள்ளுவர் கேள்வி என்ற அதிகாரத்தில்,

‘கற்றில யிைனும் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை’

என்று கூறியிருப்பாரா ?

அவர்கள் ஆற்றிய சொற்கிபாழிவுகள் மக்கள் கடமை, வான நூல், கணிதம், இலக்கியம் என்னும்

பொருள் பற்றியவையாகும். சொல்மாரி பொழிந்தவர்கள் அவ்வக்கலையில் நன்கு தேர்த்து ஐயந்திரிபறக் கற்றவராதலின், கேட்டிார் உள்ளங் கொள்ளும் வகை கூறிக் கேட்டார் பலரையும், இக்கலைகளில் அறிவு நிரம்பப் பெற்றவர்களாக ஆக்கி விட்டனர்.

இதனால், ஏதென்ஸ் நகர மாணவிகள் கலையின் நிமித்தம் கல்லூரியை நாடிக் கற்க வேண்டிய நியதி அற்றவர் ஆயினர். கலை அறிவோடு மிகமிக இன்றியமையாததாகக் கற்பிக்கப்பட்டு வந்த கலை, சொற்பொழிவு ஆற்றும் கலையே ஆகும். மிகுதியாகப் படிப்பதினும் படித்தவற்றைப் பிறர்க்கு எடுத்துக் கூறும் ஆற்றலை இவர்கள் பெரிதும் போற்றி வந்தனர். கற்றவற்றைக் கலைஞர் முன் கழறாதவர் ‘நாறா மலர் அனையர்’ என்றும் அன்றோ வள்ளுவர் வைகின்றார்?

நன்கு பேசுந் திறனுடையவரையே அக்காலப் பொதுமக்கள் விழைந்து நின்றனர். இஃது இயற்கை தான். தமிழ் நாடும் அவர்களையே விரும்பி ஏற்றுக் கொண்டது.

வாழ்க்கையில் வெற்றி காண விழைவோர் பேசுந்திறன் பெறுதல்வேண்டும் என்பது ஏதென்ஸ் நகர மக்கள் விருப்பம்.

இவ்வாறு கொல்மாரி ஆற்றி வந்த சோபிஸ்டுகள் கி. மு. 4 ஆம் நூற்றாண்டில், முறையாகப் பள்ளிக்கூடம் தொடங்க ஆரம்பித்து விட்டனர். அப்பள்ளிகளில் ஒன்று பிளேடா (Pluto) தலைமை யிலும், மற்றென்று அரிஸ்டாடில் (Aristotie) தலைமையிலும் நடந்தவை ஆகும்.

இந்த அளவில் கிரேக்கர் வரலாறு நின்றுவிட்டதாக எண்ணாமல், மேலும், இவர்களைப் பற்றிய வரலாற்றை விரித்த நூல்களைக் கற்று அறியவேண்டுவது நம் கடமை ஆகும்.