அறிவுக் கனிகள்/கடமை

விக்கிமூலம் இலிருந்து

18. கடமை

383.கடமையைச் செய்துவிட்டேன்; அதற்காகக் கடவுளைத் துதிக்கிறேன்.

செல்ஸன்

384.உன் கடமையைச்செய்ய முயல்க; அப்பொழுது உன் தகுதியை உடனே அறிந்துகொள்வாய்.

கதே

385.கடமையை நிறைவேற்ற அன்பு, தைரியம் என்று இரண்டு வழிக்காட்டிகள் உள. இரண்டும் ஒன்று கூடிவிட்டால் ஒருநாளும் வழி தவறுவதில்லை.

அனடோல் பிரான்ஸ்

386.சாந்தம், குதூகலம்-இவையே அறங்களின் முன்னணியில் நிற்பன. இவையே பரிபூர்ணமான கடமைகள் ஆவன.

ஆர். எல். ஸ்டீவன்ஸன்
387.நல்லவனும் ஞானியும் சில சமயங்களில் உலகத்தைக் கோபிக்கலாம், சில சமயங்களில் அதற்காக வருந்தலாம். ஆனால் உலகில் தன் கடமையைச் செய்பவன்
ஆர். எல். ஸ்டீவன்ஸன்

எவனும் அதனிடம் ஒருபொழுதும் அதிருப்தி கொள்வதில்லை என்பது மட்டும் நிச்சயம்.

ஸதே

388. பிறர்க்கு நான் செய்ய வேண்டிய கடமை யாது? அவரை நல்லவராக்குவதா? நான் ஒருவனைத்தான் நல்லவனாக்க வேண்டும். அவன் நானே. பிறர்க்குச் சந்தோஷம் அளிப்பதே அவர்க்கு நான் செய்யக்கூடிய கடமையாகும்.

ஆர்.எல். ஸ்டீவன்ஸன்

389.செய்ய இயலாததில் சினங்கொள்வது ஏன்? செய்ய இயன்றதைச் செய்வோமாக.

ரொமெய்ன் ரோலண்டு

390.உலக அரங்கில், 'இன்ன வேஷதாரியாகத்தான் நடிப்போம்' என்று கூற இயலாது. கொடுத்தவேலையைத் திறம்படச்செய்து முடிப்பதே நமது கடன்.

எபிக்டெட்டஸ்

391.செய்ய வேண்டியதைச் செய்ய முயல்க; முயன்றால் செய்யவேண்டியது இது என்பதில் சந்தேகம் ஏற்படாது.

ஆவ்பரி

392.கெட்ட காலம் வந்தால் எப்படிச் சகிப்பது என்பது குறித்து, நல்ல காலத்தில் சிந்தனை செய்வது மாந்தர் கடன்.

டெரன்ஸ்
நியூட்டன்

393. இன்று உன்னால் கூடியமட்டும் நன்றாய்ச் செய், நாளை அதனினும் நன்றாய்ச் செய்யும் ஆற்றல் நீ பெறக் கூடும்.

நியூட்டன்

394.அறமே ஆற்றல் என்று நம்புவோமாக. அந்த நம்பிக்கையுடன் நாம் அறிந்த கடமையை ஆற்றத் துணிவோமாக.

ஆப்ரகாம் லிங்கன்

395.உன் கடமையைத் தைரியமாய்ச் செய்துவிட்டால் நீ அடையும் பலன் யாது? அதைச் செய்ததையே பலனாய் அடைவாய். செயலே பலனாகும்.

ஸெனீக்கா

396.சுயநலத்திலுள்ள நன்மை யாது? மனிதர் கடமையைக் கடனாகவும், உரிமையை வரவாகவும் ஆக்கிவிட்டனர்; வியாபாரம் என்றும் வியாபாரமே!

கடனின்றி வாழ விரும்பினால் உரிமைகளைத் துறக்க வேண்டும்.

பால் ரிச்சர்டு

397.ஒருபொழுதும் தவறு செய்யாதவன் ஒன்றும் செய்யமாட்டான்.

ஆவ்பரி

398. ஒன்றும் செய்யாது காத்திருப்பவரும் ஊழியம் செய்பவரே

மில்டன்

399.உனக்குத் தெரிந்தவற்றை யெல்லாம் நன்றாக அனுஷ்டிக்க முயல்க. அங்ங்ணம் செய்தால் நீ அறிய விரும்பும் மறைபொருள்களை யெல்லாம் சரியான காலத்தில் தெரிந்து கொள்வாய்.

செம்பிராண்ட்

400. தானே செய்யக்கூடியது எதையும் பிறர் செய்ய விடலாகாது.

இப்ஸன்

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவுக்_கனிகள்/கடமை&oldid=999993" இலிருந்து மீள்விக்கப்பட்டது