36 இறையனார் அகப்பொருள் (களவு எனின், பின்னையும் எஞ்ஞான்றும் மெய்யுறவுவகை கூடாதாம். புத்திரலாபத்திற்கு மெய்யுறுபவே எனின், கருமப்பொருட் டன்றி வேட்கையில்லை என்பதனால், உள்ளப்புணர்ச்சி உரை பன்று, மெய்யு றுபுணர்ச்சியே வேண்டும் என்பது. சொற்பாடு
இனி, ஒரு சாரார் உரைக்குமாறு : மெய்யுறுபுணர்ச்சி தக்கது, இன்சொல்லும் கூற்றும் இன்றிப் பசுப்போலப் புணர்ந்தார் என்பது தகாது. சொற்படுகால் முறைமையான் நிகழ்ந்து புணர் தல் தகவுடைத்து. அவை யாவையோ எனின் - காட்சி, ஐயம், தெளிதல், தேறல் என இவை. அவற்றுள்,
காட்சி என்பது - இருவரும் தம்முட் கண்ணுறுவது. அதற்குச் செய்யுள்;
- 'பூமரு கண்ணிணை வண்டாப் புணர்மென் முலை அரும்பாத்
- தேமரு செவ்வாய் தளிராச் செருச்செந் நிலத்தை வென்ற
- மாமரு தானையெங் கோன்வையை வார்பொழி லேர்கலந்த
- காமரு பூங்கொடி கண்டே களித்த எம் கண்ணிணையே.'
ஐயம் என்பது - கண்ணுற்ற பின்னை ஐயப்படுவது. எங்ஙனமோ எனின், வரையரமகள் கொல்லோ, வானரமகள் கொல்லோ, நீரரமகள் கொல்லோ, இத்துணை மேதகவுடையாள்! அன்றி, மக்களுள்ளாள் கொல்லோ ! என்றும் ஐயப்படுவது. அதற்குச் செய்யுள் :
- 'உரையுறை தீந்தமிழ் வேந்தன் உசிதன் தென் நாட்டொளிசேர்
- விரையுறை பூம்பொழின் மேலுறை தெய்வங்கொ லன்றிவிண்தோய்
- வரையுறை தெய்வங்கொல் வானுறை தெய்வங்கொல் நீர் மணந்த
- திரையுறை தெய்வங்கொல் ஐயந் தருமித் திருநுதலே.' (உ)
இவளும் அவனை ஐ'யட்படும். கடம்பமர் கடவுள் கொல்லோ , இயக்கன் கொல்லோ! அன்றி, மக்களுள்ளான்கொல்லோ என்று இங்கனம் ஐயப்படும். இவ்வகை நினைந்தபின்னைத் தெளிவு வருமாறு : ஆடை மாசுண்டலானும், கால் நிலந்தோய்தலானும், கண் இமைத்த லானும், கண்ணி வாடுதலானும், சாந்து புலர் தலானும் என்று இங்ஙனந் தெரியும்; தெரிந்த பின்னைத் துணியும் என்பது. அதற்குச் செய்யுள் :
- 'பாவடி யானைப் பராங்குசன் பாழிப் பகை தணித்த
- தூவடி வேல்மன்னன் கன்னித் துறைச்சுரும் பார்குவளைப்
- பூவடி வாள் நெடுங் கண்ணும் இமைத்தன பூமிதன் மேற்
- சேவடி தோய்வகண் டேன்தெய்வ மல்லளிச் சேயிழையே.' (3)