24
தமிழ்ப் பழமொழிகள்
பொரி மாவை மெச்சினாளாம், பொக்கை வாய்ச்சி.
- (மெச்சினாராம்... வாயர்.)
பொருந்திய ஒழுக்கம் திருந்திய செல்வம்.
பொருள் ஆசையும் மனச்சாட்சியும் பொருந்துமா?
பொருள் இல்லார்க்கு அருளும் இல்லை. 17425
பொருள் இல்லார்க்கு இல்வுலகம் இல்லை; அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை.
பொருள் இல்லார்க்குப் பூலோகம் இல்லை.
பொருள் உள்ளோர்க்குப் பூலோகம் உண்டு; அருள் இல்லோர்க்கு அந்த லோகம் உண்டு.
பொருள்தனைப் போற்றுவான்.
- (போற்றிவாழ்)
பொருள் போன வழியே துக்கம் போம். 17430
பொருளும் கொடுத்துப் பழியும் தேடுவதா?
பொருளும் போகமும் கூடவரா: புண்ணியமே கூட வரும்.
பொருளை இச்சித்துப் புது மண்டபத்தை இடிப்பது போல.
- (பொது மண்டபத்தை, )
பொருளைப் போட்ட இடத்தில் தேடு.
பொவலாக் குணத்துககுப் பூமியில் மருந்து இல்லை. 17435
பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்.
பொல்லாத காலத்துக்குப் புடைவையும் பாம்பு ஆகும்.
பொல்லாத காலம் சொலலாது வந்தது.
- (வரும்.)
பொல்லாத காலம் சொல்லாமல் வரும் புரட்டாசியிலே,
பொல்லாத குணத்துக்கு நல்ல மருந்து உண்டா? 17440
பொல்லாத மனம் புத்தி கேளாது.
பொல்லாதவர்கள் சங்காத்தம் உப்பு மணலில் விழுந்த நீர்போல.
- (உப்பு மண்ணில்.)
பெல்லாதவர்கள் சினப்பட்டால் கல்லின் பிளவு போல ராசியாக மாட்டார்கள்.
பொல்லாத வேளைக்குப் புழுவும் சாரைப் பாம்பு.
பொல்லாதது எனபது பொய் உடல். 17445
பொல்லாப் பிள்ளை இல்லயப் பிள்ளை.
பொல்லாப் பெண்ணுக்கு எல்லாம் துக்கிரி.