தமிழ்ப் பழமொழிகள்
23
ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு எளிது. 6230
- (லேசு, இன்பம்.)
ஓடுகிறவனை விரட்டுகிறது எளிது.
ஓடுகிற வெள்ளம் அணையில் நிற்குமா?
ஓடுபவனும் அம்மணம்; துரத்துகிறவனும் அம்மணம்.
ஓடும் இருக்கிறது: நாடும் இருக்கிறது.
ஓடும் நாயைக் கண்டால் குரைக்கும் நாய்க்கு இளக்காரம். 6235
ஓடோடிப் போனாலும் ஓடக்காரன் தாமசம்.
ஓணத்து மழை நாணத்தைக் கெடுக்கும்.
ஓணான் ஓட்டம் எவ்வளவு தூரம்?
ஓணான் கடித்தால் ஒரு நாழிகையில் சாவு: அரணை கடித்தால் அரை நாழிகையில் சாவு.
ஓணான் தலை அசைத்தால் ஒன்பது கலம் நெல் மசியும். 6240
ஓணான் விழுங்கிய கதை போல.
ஓணான் வேலிக்கு இழுக்கிறது; தவளை தண்ணீருக்கு இழுக்கிறது.
ஓணானுக்கு வேலி சாட்சி; வேலிக்கு ஓணான் சாட்சி.
ஓணானை அடித்தால் உழக்குப் புண்ணியம்.
- (ஓணானைக் கொன்றால்.)
ஓதப் பணம் இல்லை; உட்காரப் பாய் இல்லை; உனக்கு என்ன வாய்? 6245
ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.
ஓதின மஞ்சள் உறியிலே இருக்கும் போது வேதனை என்ன செய்யும்?
ஓதும் வேதம் பேதம் அகற்றும்.
ஓதுவார் எல்லாம் உழுவார் தலைக்கடையில்.
- (+ உழுவார் எல்லாம் கருமான் தலைக் கடையில்.)
ஓதுவார்க்கு உதவு. 6250
ஓதுவானுக்கு ஊரும் உழுவானுக்கு நிலமும் இல்லையா?
- (நிலமுமா கிடையாது?)
ஓந்தி வேலிக்கு இழுக்கிறது; தவளை தண்ணீருக்கு இழுக்கிறது.
ஓநாய்க்கு அதிகாரம் வந்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்கும்.