தமிழ்ப் பழமொழிகள் 3/16

விக்கிமூலம் இலிருந்து


பா


பாக்கத்தான் பேர் பெற்றான்; மாங்காட்டான் நீர் பெற்றான். 15860


பாக்கியவதி என்று பறந்து ஓடி வந்தவன் கோத்திரத்தைக் கேட்டுக் குதித்தோடிப் போனான்.

பாக்கியவான் பிள்ளையை முகத்தில் தெரியும்.

பாக்குக் கடிக்கிற நேரத்தில்.

பாக்குக் கடிக்குமுன் பத்துமுறை மழை பெய்யும்.

பாக்குக் கொடுத்த பாக்கியவதி. 15865

(தந்த.)


பாக்குக் கொடுத்தால் பந்தலிலே என்ன அலுவல்?

பாக்குத் தோப்பு ஆனால் மடியில் கட்டுகிறதா?

பாக்கு வெட்டியில் அகப்பட்ட பாக்குப் போல.

பாக்கை மடியிலே கட்டலாம்; தோப்பை மடியிலே கட்டலாமா?

(வைக்கலாம்.. வைக்கலாமா?)

பாகல் மிதியுண்டும் பாத்துக்கு உகந்தது. 15870


பாகல் விதைக்கச் சுரை முளைக்குமா?

பாகற்காய் என்றால் பத்தியம் முறிந்து போச்சா?

பாகற்காய்க்காகப் பங்கை ஏற்ற கதை போல.

பாகற்காய்க்கு உப்புப் பதம் அறிந்து போடு.

பாகற்காய்க்குப் பருப்பு இல்லை என்று சொன்னாளாம். 15875


பாகற்காய் விற்ற கூடை பணக்கூடை.

பாகற்காயைப் பூனை கொண்டு போனதென்றால், கேட்பாருக்கு மதி எங்கே போச்சு?

பாகற் கொட்டை புதைக்கச் சுரைக் கொட்டை முளைக்குமா?

(விதைக்க.)

பாகை சொந்தம்; மற்றதெல்லாம் இரவல்.

பாசத்தில் மிஞ்சியது ஆசாபாசம்; அதனிலும் மிஞ்சியது ரத்த பாசம். 15880 

பாசம் அற்றவன் பரதேசி.

பாசம் அற வற்றிப் பசை அறத் தேய்க்கிறது.

பாசி மணிக்காரி ஊசி விற்றது போல.

பாட்டி கெட்டிக்காரி; பதக்கைப் போட்டு முக்குறுணி என்பாள்.

(பாட்டி பைத்தியக்காரி)

பாட்டி சமைத்த மயிரில் கீரையும் இருந்தது. 15885


பாட்டி நூற்பது பேரன் பூணூலுக்கு போதாது,

பாட்டி நூற்ற நூலுக்கும் பேராண்டி அரை நாண் கயிற்றுக்கும் சரியாப் போச்சு.

பாட்டி பதக்கரிசி தீட்டிக் கோணற்காலை நீட்டிக் குசு விடடி பாட்டி.

பாட்டி பார்த்தால் பைத்தியக்காரி, பதக்குப் போட்டு முக்குறுணி என்பாள்.

பாட்டி முற்றினால் பேததி; போட்டி முற்றினால் நாத்தி. 15890

(நாஸ்தி; பேத்தி முற்றினால்)


பாட்டி வீட்டு நாய்க்குப் பரதேசி உபதேசம் செய்தாற் போல.

பாட்டுக்கு அழுவார்; பணிக்கு அழுவார்; வையகத்தில் பாக்குக்கு அழுத பாரதத்தைக் கண்டது இல்லை.

பாட்டுப் பலிக்கும் பாக்கியவானுக்கு.

பாட்டுப் பலித்தால் கிழவியும் பாடுவாள்.

பாட்டுப் போன வெட்டவெளியிலே வீட்டைக் கட்டுவானேன்? 15895


பாட்டு வாய்த்தால் கிழவியும் பாடுவாள்.

பாடகக் காரியிடம் பாரதம் சொன்னால் பாடகத்தைப் பார்ப்பாளா? பாரதத்தைக் கேட்பாளா.

(பாரதம் படிக்கச் சொன்னால், பாரதத்தைப் படிப்பாளா?)

பாடகக் காரி வாழ்ந்தால் பத்து எட்டுச் சனம் பிழைக்கும்.

(விழுந்தால்.)

பாடத் தெரியாத பாகவதருக்குப் பக்க வாத்தியம் போதாதாம்.

பாடப் பாட ராகம்; படுக்கப் படுக்க ரோகம். 15900


பாடப் பாட ராகம்; மூடமூட ரோகம்.

(ஏட ஏட ரோகம் ஏட-அழ; தெலுங்கு.)

பாடம் ஏறினும் ஏடது கைவிடேல.

பாடல் இல்லாத தாசிபோல.

பாடல் பாடிக் குத்தினாலும் பதரில் அரிசி வருமா?

பாடிக் கறக்கிற மாட்டைப் பாடிக் கறக்க வேண்டும்; ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும். 15905


பாடி, குறட்டூர், பாழாய்ப் போன அம்பத்தூர்.

பாடிப் பாடிக் குத்தினாலும் பதரில் அரிசி வராது.

(இல்லை)

பாடு அறிந்து பாடு பட்டால் பாழும் காடும் நெல் விளையும்.

பாடு இல்லாமல் பயன் இல்லை.

பாடு என்றால் பாணனும் பாடான். 15910


பாடு பட்ட அம்மாளுக்குப் பழைய சேலை; கூர் கெட்ட அம்மாளுக்குக் குறியோடு சேலை,

பாடு பட்ட கட்டாடிக்கு அள்ளிப் போடு பூசணிக்காயை.

(கட்டாடி வண்ணான் - யாழ்ப்பாண வழக்கு.)

பாடு பட்ட கட்டாடிக்குப் பூசணிக்காயும் சோறும்.

(யாழ்ப்பாண வழக்கு.)
(அள்ளிப் போடு பூசணிக்காயை.)

பாடு பட்ட நாய்க்குக் கேடு வந்ததைப் போல.

பாடு பட்டவன் பட்டத்துக்கு இருப்பான். 15915


பாடு பட்டால் பலன் இல்லை.

பாடு பட்டால் பலன் உண்டு.

பாடு படாமற் போனால் பலன் இல்லாமற் போகும்.

பாடு, பாடு என்றால் பறையனும் பாடமாட்டான்; தானாகப் பாடினால் தலை தெறிக்கப் பாடுவான்.

பாடும் இல்லை; பலனும் இல்லை. 15920


பாடும் புலவர் கையில் பட்டோலை ஆனேனே!

பாடை ஏறினும் ஏடது கைவிடேல்.

பாடைக்குப் பிணம் பற்றாமல் போக.

பாடையிலே பார்க்க வேணுமென்றால் சாகையிலே வா.

பாண்ட மங்கலம், பரமத்தி, பையனைக் கண்டால் பிரம்ம ஹத்தி. 15925


பாண்டவர்கள் தெரியாதா? கட்டில் கால் போல மூன்று பேர் என்று இரண்டு விரலைக் காட்டி, ஒரு கோடு போட்டு, அதையும் அழித்தானாம்,

பாண்டி பதினாறு

(சிவன்தலம்.)

பாண்டியில் இரண்டு; பட்டரில் இரண்டு.

(அதிவீரராமன், வர துங்கராமன்; சிவஞான முனிவர்; கச்சியப்ப முனிவர்.)


பாண்டியில் இரண்டும் பட்டியில் இரண்டும்,

பாணம் தொடுத்தாற் போல் பேசுகிறான். 15930


பாணர்தம் அடியார் பரதேசம் போனால் விறகையும் சுமந்து கொண்டு மீனவருவார்.

(திருவாலா வாயுடையார் திருவிளையாடற் புராணம், 54:49.)

பாத்திரம் அறிந்து பிச்சை இடு; கோத்திரம் அறிந்து பெண் கொடு.

பாத்திரம் பொங்குகிறதற்குள்ளே ஆத்திரம் பொங்கப்படாது.

பாதகர் பழக்கம் பாம்பொடு பழக்கம் போல.

(பழகல் போல.)

பாதம் எப்படி, பக்தர் அப்படி. 15935

(பரதம் எப்படி.)


பாதிக் கல்யாணம் ஆனாற் போல.

பாதிக் காய் கறிக்கும், பாதிக் காய் விதைக்குமா?

பாதிக் கிணறு தாண்டினாற் போல,

பாதிக்கு மேல் சிற்றப்பாவா?

பாதிச் சுரைக் காய் கறிக்கும், பாதிச் சுரைக்காய் விதைக்குமா? 15940


பாதிப் பாக்குக் கொடுத்துப் படகுப் பாக்கு அடித்துக் கொண்டு போவது போல.

பாதிப் பாக்கைக் கப்பலில் போட்டுப் பங்குக்கு நின்றானாம்.

பாதி வயதில் படை எடுத்துக் கொண்டு போகிறான்.

பாப்பா சாலே அடித்துப் பருப்பும் சோறும் போட்டது போல.

பாப்பாத்தி அம்மா மாடு வந்தது. 15945


பாப் பாதி பண் பாதி.

பாபநாசம் படி அழகு.

பாபீ சதாயுஸ்

பாம் பாட்டிக்குப் பாம்பாலே சாவு; கன்னனுக்குக் கனவாலே சாவு.

பாம்பாட்டி பாம்பிலே; கள்ளன் களவிலே, 15950


பாம்பாட்டி பெற்றவை பத்தும் குரங்கு.

பாம்பில் குட்டி பாம்பு; அதன் குட்டி நட்டுவாங்க் காலி.

(பாம்பின் குட்டி.)

பாம்பிலும் பாம்புக் குட்டிக்கு விஷம் அதிகம்; வீரியம் அதிகம்

பாம்பின் கால் பாம்பு அறியும்.

பாம்பின் குட்டிக்குப் பால் வார்த்து வளர்த்த கதை. 15955


பாம்பின் வாய்த் தேரை போல.

(தவளை போல.)

பாம்பின் வாயில் உள்ள தேரை குதித்துப் புகழ்ந்தாற் போல்.

பாம்பு அடித்த கம்பு பாறையனுக்கு.

பாம்பு அடித்த தோஷம் பொங்கி விட்டாலும் போகாது.

(பொங்கல் இட்டாலும்.)

பாம்பு அடித்துப் பரணில் போட்டால் சமயத்துக்கு ஆகும், 15960


பாம்பு அறியும் பாம்பின் கால்.

பாம்பு ஆனாலும் பழகினது தேவலை.

பாம்பு இரையை நினைத்தால், தேரை விதியை நினைக்கிறது,

பாம்பு என்றால் படையும் நடுங்கும்.

பாம்பு என்றால் படையும் நடுங்கும்; குரங்கு என்றால் குழந்தைகள் கூடும். 15965


பாம்பு என்று தாண்டுதற்கும் இல்லை; பழுதை என்று மிதிப்பதற்கும் இல்லை.

பாம்புக்குச் சத்துரு பஞ்சமா?

(சத்துருக்கள் கொஞ்சமா?)

பாம்புக் குஞ்சுக்கு நீந்தப் பழக்க வேணுமா?

பாம்புக் குட்டிக்குப் பால் வார்த்து வளர்த்தாலும் படு விஷத்தைக் கொடுக்கும்.

(பாம்புக்கு.)

பாம்புக் குட்டிக்கு விஷம் பாலாடை வைத்துப் புகட்ட வேணுமா? 15970


பாம்புக் குட்டியைக் கண்ட இடத்தில் தலையை நசுக்கு.

பாம்புக்குத் தச்சன் கறையான்.

பாம்புக்குத் தடை கட்டினாற் போல.

பாம்புக்குத் தலையைக் காட்டி மீனுக்கு வாலைக் காட்டுகிறது.

(விலாங்கு மீன்.)

பாம்புக்குப் பகை கருடன். 15975


பாம்புக்குப் பல்லிலும் தேளுக்கு வாலிலும் விஷம்.

பாம்புக்குப் பல்லிலே விஷம்; துஷ்டனுக்கு உடம்பெல்லாம் விஷம்.

(துரோகிக்கு.)

பாம்புக்குப் பாம்பு விஷம் உண்டா?

பாம்புக்குப் பால் வார்த்தது போல்,

பாம்புக்குப் பால் வார்த்தால் வார்த்தவளையே கடிக்கும். 15980


பாம்புக்குப் பால் வார்த்து வளர்த்தாலும் அதன் விஷம் நீங்காது; வேம்புக்குத் தேன் வார்த்தாலும் வேப்பிலைக் கசப்பு மாறாது.


பாம்புக்கு மருந்து கேட்கத் தேளுக்குப் மந்திரித்தது போல.

பாம்புக்கு மூப்பு இல்லை.

பாம்புக்கு ராஜா மூங்கில் தடி.

பாம்புக்கு விஷம் பல்லிலே; பரத்தைக்கு விஷம் உடம் பெங்கும். 15985


பாம்பு கடிக்கத் தேளுக்குப் பார்க்கிறதா?

பாம்பு கடித்தாலும் பிழைக்கலாம்; பாக்குக் கடித்தால் பிழைக்க முடியாது.

பாம்புச் செவி.

பாம்பு தன் பசியை நினைக்கும்; தேரை தன் விதியை நினைக்கும்.

பாம்பு தின்கிற ஊரிலே போனால் நடுமுறி நமக்கு என்று இருக்க வேண்டும். 15990

(நடுத்துண்டு, நடுக் கண்டம்.)


பாம்புப் பிடாரனுக்குப் பாம்பாலே சாவு.

பாம்பு பகையும் தோல் உறவுமா?

பாம்பு பசிக்கில் தேரையைப் பிடிக்கும்.

பாம்பு பசியை நினைக்கிறது; தேரை விதியை நினைக்கிறது.

பாம்பு படம் விரித்து ஆடிய தென்று நாங்கூழ்ப் பூச்சியும் தலைதூக்கி ஆடியதாம். 15995


பாம்பும் கீரியும் போல.

பாம்பும் கீரியும் போலப் பல காலம் வாழ்ந்தேன்.

பாம்பும் சாகவேண்டும்; கோலும் முறியக் கூடாது.

பாம்பும் சாகாமல் பாம்பு அடித்த கோலும் முறியாமல் இருக்க வேண்டும்.

(பாம்பும் நோவாமல் கம்பு நோவாமல்.)

பாம்பும் தப்பாமல் கொம்பும் முறியாமல். 16000

(ஒடியாமல்.)


பாம்பும் தன் பசியை நினைந்து தேரையும் தன் விதியை நினைந்த கதை.

பாம்பும் நோவாமல் பாம்பு அடித்த கோலும் நோவாமல் இருக்க வேண்டும்.

பாம்பும் போச்சு; பாம்பு அடித்த கோலும் போச்சு.

பாம்பை அடித்தால் பால்வார்த்துப் புதைக்க வேண்டும்.

பாம்பைத் தின்று பாழ்மூலையில் இருக்கையில் வீம்புக்காய் என்னை வெளியில் இழுக்கிறீரா? 16005


பாம்பைப் பழுதை என்று மிதிக்கும் பருவம்.

பாம்பைப் பிடித்துப் பல்லைப் பார்ப்பதா?

பாம்பை மிதிக்கும் வயசு,

பாம்பை மிதித்தவன் போல.

பாம்பை முட்டையிலே, புலியைக் குட்டியிலே கொல்ல வேண்டும். 16010


பாம்பை வளர்த்தாற் போல.

பாம்போடு ஒரு கூரைலில் பயின்றாற் போல.

பாம்போடு குடியிருப்பது போல.பாம்போடு பழகேல்.

பாமணி ஆற்றிலே பல்லை விளக்கு; முல்லை ஆற்றிலே முகம் கழுவு. 16015


பாய்க்குத் தகுந்தபடி காலை நீட்டு.

பாய்கிற மாட்டுக்கு முன்னே வேதம் சொன்னாற் போல.

பாய் கிடக்க மலம் கிடக்கப் பாட்டி செத்தாள்; அழ வந்தேன்.

பாய்ச்சலும் வேண்டும்; காய்ச்சலும் வேண்டும்.

பாய்ச்சி அறுத்தால் பதக்கு நெல்கூடக் காணும். 16020


பாய்மரம் இல்லாக் கப்பலைப் போல,

பாய் மரம் சேர்ந்த காகம் போல் ஆனேன்.

பாயாத கருங் காட்டில் பருத்தி விதைத்தால் பயன் தரும்.

பாயும், ஜலம் முழுதும் கட்டு; பழைய எரு எடுத்துக் கொட்டு.

பாயைச் சுருட்டடி பிள்ளையை இடுக்கடி, பரதேசம் போக. 16025


பார் ஆளலாம் என்று பால் குடிக்கிறாய்.

பார் ஆளும் பட்டம் கிடைக்குமா?

பார்க்கக் கொடுத்த பணத்துக்கு வெள்ளிக்கிழமையா?

(பயணத்துக்கு.)

பார்க்கப் பதினாயிரம் கண் வேண்டும்,

பார்க்காத உடைமை பாழ். 16030


பார்க்கிற கண்ணிலும் கேட்கிற செவி இன்பம்.

பார்க்கிற கண்ணுக்குக் கேட்கிற செவி பொல்லாதது.

(காது.)

பார்க்கிற பார்வையும் தேய்க்கிற தேய்ப்பும் நான் அறிவேன்; பார், பார், தேய், தேய்.


பார்க்கிறவர்களுக்குப் பைத்தியக்காரி; மற்றவர்க்கு எல்லாம் வைத்தியக்காரி.

பார், கேன், மெளனமாய் இரு. 16035


பார்த்த கண்ணும் பூத்துப் பகலும் இரவாயிற்று.

பார்த்த கண்ணும் பூத்துப் போயிற்று.

பார்த்ததைக் கேட்பான் பார்ப்பான்.

பார்த்த முகம் எல்லாம் வேற்று முகம்.

பார்த்தவர்க்கு இன்பம்; படுபவர்க்குத் துன்பம். 16040


பார்த்தால் கிழவனடி; பத்தரை மாற்றுத் தங்கமடி.

பார்த்தால் தெரியுமா? பட்டால் தெரியுமா?

(வருத்தம்.)

பார்த்தால் பசுப் போல; பாய்ந்தால் புலி போல.

பார்த்தால் பண்டாரம்; பழகி விட்டால் ஐயா!

பார்த்தால் பூனை; பாய்ந்தால் புலி. 16045


பார்த்தால் பைத்தியக்காரன்; பத்துப் பேரை அடிப்பான்.

பார்த்தால் மாடு; பார்க்கா விட்டால் சும்மாடு.

பார்த்தால் மீனுக்குப் பசி ஆறும்; நினைத்தால் ஆமைக்குப் பசி ஆறும்,

பார்த்தாலும் பார்த்தேன்; பார்ப்பானைப் போல் பார்த்ததில்லை.

பார்த்தாலும் மெல்லி; நூற்றுக்கு ஒரு சேவகன். 16050


பார்த்திருக்கத் தின்று விழித்திருக்கக் கை கழுவுவான்.

பார்த்திருந்தவன் பச்சை குத்தினான்; கேட்டிருந்தவன் வறுத்துக் குத்தினான்

(வற்புறுத்தினாள்.)

பார்த்திருந்தும் பாழும் கிணற்றில் விழுகிறதா?

(விழுந்தாற் போல.)

பார்த்துப் பார்த்துக் கண் பூத்துப் போச்சு.

பார்ப்பதற்கு அரிய பரப்பிரமம். 16055


பார்ப்பது அறியும் பரப்பிரமம்.

பார்ப்பவருக்கு இன்பம்; படுபவருக்குத் துன்பம்.

பார்ப்பாத்தி அம்மா மாடு வந்தது; பார்த்துக் கொள் பிடிந்துக் கட்டிக் கொள்.

பார்ப்பாத்தி உப்புக் கண்டம் கடித்த கதை.

பார்ப்பாத்தி உப்புக் கண்டம் பறி கொடுத்தது போல, 16060


பார்ப்பார் சேவகமும் வெள்ளைக் குதிரைச் சேவகமும் ஆகா.

பாரப்பாரத் தமிழ், பண்டார ஸம்ஸ்கிருதம், பஞ்சாங்கக்காரன் பதார்த்தம் சுத்தம் இல்லை.

பார்ப்பாரப் பிணம் போகிறது பார்.

பார்ப்பாரப் பையன் நண்டு பிடிப்பது போல.

(பிள்ளை.)

பார்ப்பாரிடத்தில் வாயளவிலும் பேசக் கூடாது. 16065


பார்ப்பாரைப் பார்த்துக் கழுதை பரதேசம் போனதாம்.

பாரிப்பாரைப் பார்த்துப் பரதேசம் போவள் போல்.

பார்ப்பான் ஆசை கோணியும் கொள்ளாது.

பார்ப்பான் ஏழையும் பசு ஏழையும் உண்டோ?

(சாதுவும் இல்லை.)

பார்த்துக் கொள்; பிடித்துக் கட்டிக் கொள். 16070


பார்ப்பான் கறுப்பும் பறைச் சிவப்பும் ஆகா.

பார்ப்பான் குளித்தால் பொறுக்க மாட்டான்; பறையன் பல் தேய்த்தால் பொறுக்க மாட்டான்,

(பசியை.)

பார்ப்பான் சாபம், ரிஷி சாபம், ராஜ ஆக்ஞை, ஆசாரி குத்து, வண்ணான் அறை, குயவன் உதை.


பார்ப்பான் சோறு பசிக்கு உதவாது.

பார்ப்பான் தமிழும் வேளாளன் சம்ஸ்கிருதமும் வழவழ, கொழ கொழ {{float_right|16075} }

பார்ப்பான் படி அரிசியை உவப்பான்.

பார்ப்பான் பண்ணையம் கேட்பது இல்லை.

பார்ப்பான் பயிர் இழந்தான்; இரப்பான் சுகம் இழந்தான்.

பார்ப்பான் பருப்பிலே கெட்டான்; துலுக்கன் துணியிலே கெட்டான்.

பார்ப்பான் புத்தி பின்புத்தி, 16080

(செங்கற்பட்டு வழக்கு.)


பார்ப்பான் முறையீடு பசுப் பாய்ச்சலோடு சரி.

(திருபால வாயுடையால் திருவிளையாடற் புராணம் 33:30)

பார்ப்பான் வீட்டுக் கன்றுப் பசுவுக்கு மலை உண்டா என்ற கதை,

பார்ப்பான் வீட்டு வாழையும் குடியானவன் வீட்டுக் கோழியும் உருப்படா.


பார்ப்பானில் ஏழையையும் பசுவில் ஏழையையும் நம்பக் கூடாது.

(ஏழை-நோஞ்சான்.)

பார்ப்பானுக்கு இடம் கொடாதே; பறையனுக்கு அம்பலம் கொடாதே. 16085

(இடம்-இடப்பக்கம்.)


பார்ப்பானுக்கு இடம் விடாதே.

பார்ப்பானுக்குப் பல்லில் விஷம்.

பார்ப்பானுக்குப் பிறப்பு; கோவிலிலேயும் சிறப்பு.

(பார்ப்பானுக்குப் பறப்பு, கோவிலுக்கும் சிறப்பு.)

பார்ப்பானுக்குப் புத்தி பிடரியிலே.

பார்ப்பானுக்கு மூத்த பறையன், கேட்பார் இல்லாமல் கீழ்ச்சாதி ஆனான். 16090


பார்ப்பானுக்கு வாய் போக்காதே; ஆண்டிக்கு அதுவும் சொல்லாதே.

பார்ப்பானுக்கு வாய் போக்காதே; தாதனுக்குத் தலை அசைக்காதே; ஆண்டிக்கு அதுதானும் செய்யாதே.

பார்ப்பானுக்கு வாய் போக்கு; ஆண்டிக்கு அதுதானம் இல்லை.

பார்ப்புக்கு இடமும் பள்ளுக்கு வலமும் கொடுக்காதே.

பார்யா ரூபவதீ சத்ரு. 16095


பாரத்வாஜ மத்யஸ்தம்.

(பாரத்வாஜம்-கரிக்குருவி.)

பாரதம் பாட்டு அறாது; ராமாயணம் பொருள் அறாது.

பாரதமாகச் சொல்ல வேனும்.

பாரதமாய் விளைகிறது.

பார புத்தியுள்ள பறவை பதரால் பிடிபட்டது. 16100

(பலரால்.)


பாராத உடைமை பாழ்.

(பாராத பண்டம்.)

பாராத காரியம் பாழ்.

பாராதே கெட்டது பயிர்; ஏறாதே கெட்டது குதிரை; கேளாதே கெட்டது கடன்.

பாரியாள் ரூபவதி பர்த்தாவுக்கு நாற்றம்.

பாருக்கும் உண்டு பாம்புச் செவி, 16105


பாருக்கு ஊடாடப் பாறை, பசுமரத்தின் வேருக்கு ஊடாடி விடும்,

(பார்-கடப்பாறை.)

பாரோர் வாய்ச் சொல் பரமன் வாய்ச் சொல்,

பால் ஆரியனுக்கு; பசு ராமநாத சுவாமிக்கு.

பால் ஆவுடையான் விருந்துக்கு அஞ்சான்.

(ஆஉள்ளவன்.)

பால் ஆனாய் நெய் ஆனாய்ப் போட்டவன் தலைக்குப் பாக்கும் பிடிக்கிறது. 16110


பால் ஆறு உடையான் விருத்துக்கு அஞ்சான்.

பால் ஆன நெஞ்சு எல்லாம் பகை ஆக்கினான்.

பால் ஆனாலும் பசித்துப் புசி.

பால் இருக்கிறது; பாக்கியம் இருக்கிறது; பாலிலே போட்டுக் குடிக்கப் பத்துப் பருக்கைக்கு வழி இல்லை.

பால் உண்ட மேனி பற்றி எரிகிறது; நெய் உண்ட மேனி நெருப்பாய் எரிகிறது. 16115


பால் உண்பவனுக்குப் புளிங்காடி கொடுப்பது போல.

பால் உள்ள மாட்டுக் கன்றே கன்று; பணம் உள்ள வீட்டுப் பெண்ணே பெண்.

(பாக்கியவாள் வீட்டுப் பெண்ணே பெண்.)

பால் உள்ளான் விருந்துக்கு அஞ்சான்.

பால் என்றால் பூச்சி என்கிறான்.

பால் ஏடு ஆகிலும் காலம் அறிந்து உண். 16120


பால் கடலைக் குடிக்கப் பார்க்கும் பூனைபோல்.

(கம்பராமாயணம்,)

பால் கற என்றால் உதட்டிலே புண் என்கிறான்.

பால் குடிக்கப் பாக்கியம் இல்லாதவன் விலைப்பால் வாங்கினானாம்; அதையும் பூனை குடித்ததாம்.

பால் குடிக்கப் பாக்கியம் இல்லாவிட்டால் விலைப் பால் வாங்கினாலும் பூனை குடித்துவிடும்.

பால் குடித்தவனுக்குப் பால் ஏப்பம்; கள் குடித்தவனுக்குக் கள் ஏப்பம், 16125


பால் கொடுத்தவள் நினைவுக்கு மேலே பழம் கொடுத்தவள் நினைப்பு,

பால் சட்டிக்குப் பூனையைக் காவல் வைத்தாற்போல.

பால் சாப்பிட்ட வீட்டில் பகை நினைக்காதே.

பால் சுடுகிறது என்று ஊதிக் குடிப்பார்கன்; மோர் சுடுகிறதென்று ஊதிக் குடிக்கிறேன்.

பால் சுண்டினாலும் சுவை சுண்டுமா? 16130


பால் சுவை கன்றிலே தெரியும்; பாக்கியவான் பிள்ளை முகத்திலே தெரியும்.

பால் சோற்றுக்குப் பருப்புக் கறியா?

பால் தொட்டுப் பால் கறக்க வேண்டும்.

பால் நக்காத பூனையும் பரிதானம் வாங்காத அதிகாரியும் உண்டா?

(வாங்காத பிராமணனும்.)

பால் பதக்கும் ஒரு பதக்காய் எண்ணலாம். 16135


பால் பாக்கியம் இல்லாதவன் பணப்பால் கொண்டு வைத்தாலும் இராது.

பால் புளிக்குமா? பழமொழி பொய்க்குமா?

(பழமொழி தவறுமா?)

பால் பொங்கினால் பால் சட்டியிலே.

பால் பொங்கும், பாக்கியம் தங்கும்.

பால் மலையில் மின்னல் மின்னினால் பால் பொங்குகிற நேரத்தில் மழை பெய்யும். 16140

(அந்தியூர் அருகே வழங்கும் பழமொழி.)


பால் வாரித்த சோற்றுக்குத்தான் பழத்தைப் போடுகிறது.

பால் வார்த்தவர்களுக்குப் பகை நினைக்கக்கூடாது.

பால் வார்த்து முழுகுவான்.

பால் வாராவிட்டாலும் பால் வார்த்த பானையைப் பார்.

(யாழ்ப்பாண வழக்கு.)

பால் வெள்ளமாகப் போனாலும் நாய் நக்கித்தான் குடிக்க வேண்டும். 16145


பால் வேண்டாத பூனையும் பழம் வேண்டாத குரங்கும் உண்டா?

பாலகருக்குப் பலம் அழுகை; மச்சத்துக்குப் பலம் உதகம்.

பாலகன் நெஞ்சு எல்லாம் பகை ஆக்கினான்.

பாலகனைப் பறிகொடுத்தவர் மனம்போல,

பாலம் கடக்கிற வரையில் நாராயணா நாராயணா; பாலம் கடந்தால் பூராயணா, பூராயணா. 16150


பாலர் மொழி கேளாதவர் குழல் இனிது யாழ் இனிது என்பார்.

(குறள்.)

பாலருக்கு அழுகை பலம்; மீனுக்குத் தண்ணீர் பலம்.

பாலன் பஞ்சம் பத்து வருஷம் பரியம்.

(யாழ்ப்பாண வழக்கு.)

பாலனும் பால்குடியான்.

பாலான நெஞ்சு எல்லாம் பகை ஆக்கினான். 16155


பால சோதிடம் விருத்த வைத்தியம்.

(ஜோசியம்.)

பாலிலே குளித்துப் பன்னீரிலே கொப்புளிக்கக் கனாக்காண்கிறான்.

பாலுக்கு உண்டான பவிசும் இல்லை; பல்லக்குக்கு உண்டான மவுசும் இல்லை.

பாலுக்குக் காவல் பூனையை வைத்த கதை.

(பாலுக்குக் காவல் பூனையா?)

பாலுக்குச் சர்க்கரையும் கூழுக்கு உப்பும். 16160

(கூழுக்குக் கீரையும்.)


பாலுக்குச் சீனி இல்லை என்பார் கோடி; கூழுக்கு உப்பு இல்லை என்பார் கோடி.

பாலுக்குச் சீனி இல்லை என்றோர்க்கும் கூழுக்குப்பு இல்லை என்றோர்க்கும் விசாரம் ஒன்றே.

(கூழுக்குடப்பு குல்லை கவலை ஒன்றே,)

பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்.

பாலுக்கு மிஞ்சின சுவையும் இல்லை; பல்லக்குக் மிஞ்சின சொகுசும் இல்லை.

பாலுக்கு மிஞ்சின பவிசும் இல்லை; சொகுசும் இல்லை 16165

(பாலுக்கு மிஞ்சின பசுவும்.)


பாலுக்கு வந்த பூனை மோரைக் குடிக்குமா?

பாலுடன் கூடிய நீர் போல.

பாலும் ஆயிற்று, மருந்தும் ஆயிற்று.

(ஆம்.)

பாலும் சாதம் சாப்பிடு என்றால் பாழும் வீட்டைக் காக்கிறேன் என்பது போல.

பாலும் சோறுமாய்த் தின்கிற பாளையக்காரன் மோட்டு வளையை எண்ணிகிறது போல. 16170


பாலும் தேனும் கலத்தாற் போல.

(சேர்ந்தாற் போல.)

பாலும் நீரும் போல

(+நாரும் பூவும் போல,)

பாலும் நெய்யும் உடலுக்கு உறுதி; வேலும் வாளும் அடலுக்ரு உறுதி.

பாலும் பதக்கு, மோரும் பதக்கோ?

பாலும் வெள்ளை; மோரும் வெள்ளை. 16175


பாலை ஊட்டுவார்கள்; பாக்கியத்தை ஊட்டுவார்களா?

(ஊட்டலாம்.)

பாலை ஒரு கண்ணிலும் சீழை ஒரு கண்ணிலும் பார்ப்பது.

பாலைக் கமரிலே உகுத்தாற்போல.

பாலைக் குடிக்க வந்த பூனை மோரைக் குடிக்குமா?

பாலைக் குடிக்கிற பூனைக்கு அடிக்க வருகிறது தெரியுமா? 16180


பாலைக் குடிக்கிற பூனை பானையையும் கொண்டு போமா?

பாலைக் குடித்தவனுக்குப் பால் ஏப்பம் வரும்; கள்ளைக் குடித்தவனுக்குக் கள் ஏப்பம் வரும்.

பாலைச் சுருக்கி மோரைப் பெருக்கிக்குடி.

பாலைத்தான் புகட்டலாம்; பாக்கியத்தைப் புகட்ட முடியுமா?

(ஆரோக்கியத்தையும்.)

பாலைப் பார்க்காவிட்டாலும் பால் பானையைப் பார்க்க வேண்டும். 16185


பாலைப் பார்க்கிறதா? பானையைப் பார்க்கிறதா?

(பார்த்தோ, பாத்திரத்தைப் பார்த்தோ.)

பாலைப் பார்த்துப் பசுவைக் கொள்; தாயைப் பார்த்துப் பெண்ணைக் கொள்.

பாலை வார்த்துத் தலையை முழுகி விடு.

பாலை விரும்பாத பூனையும் உண்டோ? 16190


பாலொடு கலந்த நீரும் பால் ஆகிவிடும்.

பாாலாடு ஆயினும் காலம் அறிந்து உண்.

பாவட்டம் பூப்போல நரைத்தும் புத்தி இல்லை.

பாவத்துக்கு இடம் கொடாதவன் பாவத்தை ஜயம் கொள்வான்.

(பாவத்தைச் செய்யச் செய்வான்.)

பாவத்துத்குப் பிள்ளை பெற்றால் பரியாரி என்ன செய்கிறது. 16195

(பரியாரி வைத்தியன்.)


பாவம் இருக்கும் பந்தல் காலிலே.

பாவம் உள்ள இடத்திலே பழி போம்.

பாவம் என்று பழம் புடைவை கொடுத்தால் பின்னாடிபோய் முழம் போட்டுப் பார்த்தாளாம்.

(தோட்டத்தில் போய்.)

பாவம் ஒரு பக்கம்; பழி ஒரு பக்கம்.

பாவம் ஒன்று பார்த்தால் பழி ஒன்று வந்து சேரும். 16200


பாவம் சாடுவதற்கு அஞ்சுமா?

பாவம் தோன்றிய நாள் முதல் தோன்றிய பழையோன்.

பாவம் பண்ணினவன் பந்தியிலே.

பாவம் போகப் பால் வார்த்து முழுகு.

பாவலர் அருமை நாவலர் அறிவார் 16205


பாவலும் நாவலும் பத்தரை மாற்று.

பாவி அதிர்ஷ்டம் பதராய் விளைந்தது.

பாவிக்கு நூறு ஆயுசு.

(வயசு.)

பாவி கொடுமை பாலும் புளிக்கிறது.

பாவி பனைபோல வளரும். 16210


பாவி பாக்கியம் பதக்கு விளையும்.

பாவி பாவம் பதராய் விளைந்தது.

பாவி பேர் சொன்னால் ஏரியும் பாழ்.

பாவி போன இடம் பாதாளம்.

பாவியார் போன இடம் எல்லாம் பள்ளமும் திட்டியும். 16215

(தட்டையும்.)


பாவியையைப் பிடித்துப் பாம்பு ஆட்டுகிறது.

பாவில் இருக்கிறது; பார்த்தும் இருக்கிறது.

பாவி வாசலில் வகைப்பட்டுவிடேன் தறித்துணிச் சங்கடத்தை.

பாவி வீட்டிலே பசுவைக் கட்டு.

பாவின கல்லில் பாக்கு வெட்டினது போல. 16220


பாவை பாடிய வாயால் மோவைபாடி.

(மாணிக்கவாசகருக்கு இறைவன் சொன்னது.)

பாழ் அடைந்த பரமத்தி.

பாழ் அடைந்த பழங்குட்டிச் சுவர் போல.

பாழ் ஊரில் பயிக்கம் புக்காற் போல்.

(பயிக்கம் பிச்சை, தேவாரம்.)

பாழ் ஊருக்கு நரி ராஜா 16225


பாழாய்ப் போகிறது பசுவின் வாயிலே.

(வயிற்றிலே.)

பாழாய்ப் போகிறதைப் பசுவிடம் போடு; நாறிப் போகிறதை நாயிடம் போடு

(பசுவின் வாயில்.)

பாழில் போட்டாலும் பட்டத்தில் போடு.

பாழுக்கு இறைத்த நீர் போல.

பாழுனைக் கண்டால் பள்ளனுக்கு ஆனந்தம். 16230


பாற் கடலைக் குமக்கப் பார்த்திடும் பூனை.

பானுவைக் கண்ட பனி போலை.

பானை ஒட்டினாலும் ஒட்டும்; மாமியார் ஒட்டாள்.

பானைச் சோற்றுக்கு ஒரு சோறுபதம்.

(ஒரு பருக்கை.)

பானைப் பாலுக்கு ஒரு கொட்டு விஷம். 16235


பானை பண்ணுகிறவன் கையில் பானை உடையாது.

பானையில் அரிசி இருந்தால் பார்ப்பான் கண் உறங்கான்.

(சோறு இருந்தால்.)

பானையில் இருந்தால் அல்லவோ அகப்பையில் வரும்?

பானையில் உண்டானால் அகப்பையில வரும்.

பானையில் இருந்தால் பார்ப்பான் கண் அடையாள். 16240

(சோறு உள்ளவன். கண் உறங்காதாம்.)


பானையில் பதக்கு நெல் இருந்தால் மூலையில் முக்குறுணித் தெய்வம் கூத்தாடும்.

(முக்குறுணிப் பேய்.)

பானையோடு தின்று பறையனோடு போகிறார்களா?

பானைவாயை மூடலாம்; பட்டணத்துவாயை மூடலாமா?

பாஷைக்குத் தப்பு வராத கண்டன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தமிழ்ப்_பழமொழிகள்_3/16&oldid=1397446" இலிருந்து மீள்விக்கப்பட்டது