இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
௧௧௦
முன்னுரை
நெல்லென்னா பொன்னென்னா
கனற்றக்கொண்ட நறவென்னா
- - - - - மனையென்னா அவைபலவும்
யான்தண்டவும் தான்தண்டான்
நிணம் பெருத்த கொழுஞ் சோற்றிடை
மண்ணாணப் புகழ்வேட்டு
நீர்நாண நெய்வழங்கிப்
புரந்தோன் எந்தை . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
உண்ட நன்கலம் பெய்து நுடக்கவும்
தின்ற நண்பல் ஊன்தோண்டவும்
வந்த வைகல் அல்லது
சென்ற வெல்லைச் செலவறி யேனே'
(கரும்பனூர் கிழானை) - புறம்: 384: 10 - 18; 21 - 24
இனி, அவ்வகையில் மாறோக்கத்து நப்பசலையாா் பாடியவை:
'பாடுநர் போலக் கைதொழுது ஏத்தி
இரந்தன் றாகல் வேண்டும்'
(கிள்ளிவளவனை) - புறம்: 226: 3 - 4.
- ஒண்பொறிச் சேவல் எடுப்பஏற் றெழுந்து
- தண்பனி யுறைக்கும் புலரா ஞாங்கர்
- நுண்கோல் சிறுகிணை சிலம்ப ஒற்றி
- நெடுங்கடை நின்று பாடுபல வாழ்த்தித்
- தண்புகழ் ஏத்தினன் ஆக . . . . . . . . .
- . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
- கான்கெழு நாடன் கடுந்தேர் அவியன்என
- ஒருவனை உடையேன் மன்னே யானே'</poem> (கடுந்தேர் அவியனை) - புறம் 383: 1 - 5்; 22 - 23
இனி, அவ்வகையில் ஊன்பொதி பசுங்குடையார் பாடியவை:
'வளிமரற் றிரங்கிய கானம் பிற்படப்
பழுமரம் உள்ளிய பறவை போல