இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
402
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
வியந்து பாராட்டமாட்டார்கள். மனிதம் என்ற நிலையே தமிழர் முதன்மைப்படுத்தும் நெறி.
- "......மாட்சியில் பெரியோரை வியத்தலும் இலமே
- சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!” (புறம். 192)
எல்லாரும் இன்புற்று வாழ்தல் வேண்டும். இதுவே தமிழர் குறிக்கோள்.
- "ஓரில் நெய்தல் கறங்க ஓரில்
- ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்
- புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
- பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்
- படைத்தோன் மன்றஅப் பண்பி லாளன்
- இன்னா தம்ம இவ் வுலகம்
- இனிய காண்க, இதன் இயல்புணர்ந் தோரே! (புறம்.194)
என்ற நெறிமுறை தமிழர் முறை. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற திருக்குறள் நெறியே தமிழர் நெறி. இந்நெறிகள் வழி, தமிழ் நாட்டுக்குச் சட்டம் இயற்றுதல் வேண்டும் என்பது பாவேந்தனின் எண்ணம்.
- "நம்நாடு தமிழ்நாடு நாமெல்லாம்
- தமிழ்மக்கள் இன்பம் கோரி
- இந்நிலத்தில் வாழ்வதெனில் மூச்சாலே! .
- அம்மூச்சு தமிழே! அந்தப்
- பொன்னான தமிழாலே தமிழ்ச்சான்றோர்
- புகன்றதமிழ்ச் சட்டம் ஒன்றே
- இந்நாட்டை ஆண்டிடுதல் வேண்டுமதை
- இகழ்வானை ஒழிக்க வேண்டும்!"
(குறிஞ்சித்திட்டு-பக்.198)
என்ற பாவேந்தன் எண்ணப்படி தமிழ்நாடு ஆளப்படும் நாளே தமிழ்நாட்டுக்குப் பொற்காலத் தொடக்கமாகும்!