திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்
89
23) குடிப்பழக்கத்தால் :
‘கள்ளென்னும் பேணாப் பெருங்குற்றத்தார்’ - (924)
24) சூதாடும் உணர்வால்:
‘சிறுமை பலசெய்து சீரழிக்கும் குது' - (934)
25) நானவுணர்வு இல்லாமையால்:
'நலம் சுடும் நாணின்மை நின்றக்கடை' - (1039)
26) மனைவிமேல் கொண்ட மிகைவிழைவால் அவளுக்கு அஞ்சும் உணர்வால்:
‘இல்லாளை அஞ்சுவான் அஞ்சும்மற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்’
- (905)
27) தீய நண்பர்களால்:
'நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்’
- (817)
28) அறிவின்மையால்:
‘அறிவிலார் தாம்தம்மைப் பிழிக்கும் பீழை’ - (842)
29) நற்குணம் இன்மையால்:
‘குணனிலனாய்க் குற்றம் பலவாயின்’ - (868)
30) கயமை(கீழ்மை) உணர்வால்:
‘கயவர்... மேவன செய்தொழுக லான்’ - (1073)
முதலிய வல்லுணர்வுகளுடன், இந்தக் குறள் கருத்தையும் சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
31) இல்லாமை (வறுமை) நிலையால்:
'இலன் என்று தீயவை செய்தல்’ - (205)
‘இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்’
- (174)
2) செய்யின் மற்றும் பெயர்த்து இலனாகும் : அவ்வாறு செய்யின், ஏற்கனே இருப்பதும் நீங்கி, மேலும் இல்லாதவனாகவே ஆவான்.
மற்றும் - மீண்டும், மேலும்.
- பரிமேலழகரும் அவரைப்பற்றிப் பாவாணரும், மற்றும் என்பதில் உள்ள ‘உம்'மையைப் பெயர்த்தும் என்று பிரித்துச் சேர்த்து, மற்று என்பதை அசைநிலை என்று கூறுவர். அஃது அசைநிலையன்று.
- 'மற்றும்' என்னும் சொல்லை, ஆசிரியர், மீண்டும் அல்லது பின்னும்