திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்
71
எனவே, தீவினையச்சம் என்பது
- தீயவினைக்கு அஞ்சுதல்,
- தீயவற்றுக்கு அஞ்சுதல்,
- தீயவை செய்ய அஞ்சுதல்,
- தீய செயற்கு அச்சம் கொள்ளுதல்
எனப் பொருள்கள் தருவதாயிற்று.
அச்சம் - அஞ்சுதல் - அஞ்சி அடங்குதல்.
அம் + சு = அஞ்சு .‘சு' ஒரு சொல்லீறு.
பிஞ்சு, குஞ்சு, பஞ்சு, மஞ்சு என்றார்ப் போல.
அம் - அம - அமர் - அமர்வு - அமர்தல் - அடங்குதல்.
அம் - அம - அமை - அமைவு - அமைதல் - அடங்குதல்
அமை - அமைதி.
அம் - அம - அமு - அமுங்கு - அமுங்குதல் - அடங்குதல் - அமுக்குதல் - அடக்குதல்.
அமர்வு - அமைவு - அமுங்கு என்னும் செயல் முடிவுபோல் அஞ்சு, அஞ்சுதல் என்னும் வினைகளும், அடங்கி ஒடுங்குதல் என்னும் பொருள்களைக் குறித்தன.
எனவே, ,தீவினையச்சம், என்பது, பிறரின் உயிரழிவுக்குக் காரணமான தீயவினைகள் செய்ய அஞ்சி அடங்குதல் - அச்சம் கொள்ளுதல் - என்னும் பொருளதாயிற்று.
'தீயவை' என்பது, தீச்சொல் (28), தீயொழுக்கம் (138 தீவினை (201, 210), தீயவை (202, 208, தீப்பால (20), தீப்பிணி (22) - முதலிய அனைத்தையும் அவ்வவ்விடத்துக் குறிக்கும்.
இது தொடர்பான இலக்கியப் பயன்படுத்தங்களும், கருத்துகளும் கீழே தரப்பெறுகின்றன. -
‘தீவினை அகற்று’ - ஆத்திசூடி : 58
‘தீவினையும் அஞ்சலராய்’ - தீவினை - பழமொழி 27 : 1
'அஞ்சிலென்? அஞ்சா விடிலென்? குருட்டுக்கண்
துஞ்சிலென்? துஞ்சாக்கால் என்?'
- பழமொழி: 238:3-4
‘தீயாரைக் காண்பதுவும் தீதே; திருவற்ற
தீயார்சொல் கேட்பதுவும் தீயதே - தீயார்,
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோ(டு)
இணங்கி இருப்பதுவும் தீது.’
- வாக்குண்டாம் : 9