திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்
145
- அமைதியற்றிருக்கும் நிலைமையாவது வருந்துதல். ஒப்புரவு செய்ய இயலாவாறு செல்வம் அற்ற விடத்து, பிறரை நுகர்வியாமை பற்றியே யன்றித் தான் நுகராமை பற்றி வருந்துவதில்லை யென்பதாம் என்று இதனை விளக்குவார், மொழிஞாயிறு பாவாணர்.
‘ஈட்டிய ஒண்பொருள் இல்லெனினும் ஒப்புரவு
ஆற்றும் குடிப்பிறந்த சான்றவன் - ஆற்றவும்
போற்றப் படாதாகிப் புல்லின்றி மேயினும்
ஏற்றுக்கன்(று) ஏறாய் விடும்’
- பழமொழி:217
'அடுத்தொன்(று) இரந்தாற்கொன் றீந்தானை, கொண்டான்
படுத்தேழை யாமென்று போகினும் போக
அடுத்தேறல் ஐம்பாலாய்! யாவர்க்கே யானும்
கொடுத்தேழை யாயினார் இல்’
- பழ : 218
‘பல்நீரால் பாய்புனல் பரந்துரட்டி இறந்தபின்
இல்நீரால் அறல்வார அகல்யாறு கவின்பெற
முன்ஒன்று தமக்காற்றி முயன்றவர் இறுதிக்கண்
பின்ஒன்று பெயர்த்தாற்றும் பீடுடை யாளர்போல்’
- கலி:54:2-5
'அறந்தலைப் பிரியாது ஒழுகலும் சிறந்த
கேளிர் கேடுபல ஊன்றலும் நாளும்
வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல்லெனச்
செய்வினை புரிந்த நெஞ்சினர்’
- அகம்:173:1-4
'நல்லார் பெரிதளியர் நல்கூர்ந்தார் என்றெண்ணிச்
செல்வர் சிறுநோக்கு நோக்குங்கால் - கொல்லன்
உலையூதும் தீயேபோல் உள்கனலும் கொல்லோ
தலையாய சான்றோர் மனம்’
- நாலடி:298
‘எத்துணை யானும் இயன்ற அளவினால்
சிற்றறஞ் செய்தார் தலைப்படுவர்’
- நாலடி:272:1-2
'கொடுத்தளிக்கும் ஆண்மை யுடையவர் நல்குரவு
காண அரியன கண்’
- திரிகடு:71:3-4
'நிறைநெஞ்சு உடையானை நல்குரவு அஞ்சும்’ - திரிகடு:72:1
‘. . . . துளிஅஃகி
நல்குரவு ஆற்றப் பெருகிலும் செய்யாரே
தொல்வரவின் தீர்ந்த தொழில்
- ஆசாரக் 56:4-5