இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பா.
29
- நாய்கள் சிரிக்கும் தெருக்கூத்தாய்
- நானொரு படம் பார்த்தேன்
- நாய்கள் சிரிக்கும் தெருக்கூத்தாய்
- இல்லார் கொடுமையும் இந்நாட்டில்
- இருப்போர் சுரண்டலும் இந்நாள்
- இல்லார் கொடுமையும் இந்நாட்டில்
- கல்லார் வறுமையும் கற்றோர் கயமையும்
- கலைகளின் நலிவும் கவிகள் பஞ்சமும்
- கல்லார் வறுமையும் கற்றோர் கயமையும்
- சொல்லால் வேஷமிட்டு மேடைகளில்
- சுகபோக அரசியலின் நடிகர்களாய்
- சொல்லால் வேஷமிட்டு மேடைகளில்
- எல்லார் கண்களிலும் மண்தூவி
- இலஞ்சப் பதவிகளில் அட்டைகளாய்க்
- எல்லார் கண்களிலும் மண்தூவி
- கொல்லாமல் குருதி யுறிஞ்சிநிதம்
- கொலைபா தகங்கள் புரிகின்ற
- கொல்லாமல் குருதி யுறிஞ்சிநிதம்
- வல்லாளர் திறமெல்லாம் சிறிதுமின்றி
- வானத்துத் திரிசங்கு சொர்க்கம்போல்
- வல்லாளர் திறமெல்லாம் சிறிதுமின்றி
- இல்லாத வாழ்வுக்குக் கலைக்களையாய்
- நானொரு படம் பார்த்தேன் பட்டி
- இல்லாத வாழ்வுக்குக் கலைக்களையாய்
- நாய்கள் சிரிக்கும் தெருக்கூத்தாய்
- நானொரு படம் பார்த்தேன்.
- நாய்கள் சிரிக்கும் தெருக்கூத்தாய்
(ஆகஸ்ட், 1970)
★