8
திருக்குறள்
9.குணம்என்னும் குன்றேறி நின்றார் வெகுளி
நற்குணத்தினை ஒரு குன்றுக்குச் சமமாகச் சொல்லலாம். நற்குணத்திற் சிறந்த துறவிகள் ஒரு குன்றின் மேல் ஏறி நின்றவர்களைப்போல் எல்லாராலும் அறிந்து பாராட்டப்படக் கூடியவர்கள். அத்தகையோருக்குக் கோபம் சிறிதும் வாராது. வந்தாலும் அக்கோபம் ஒரு கண நேரத்திற்குள் அடங்கிவிடும்.
துறவிகளின் கோபம் கணநேரமே இருக்கக்கூடியதாயினும் அதனை நம்மால் சிறிதும் தடுத்துக்கொள்ள முடியாது என்றும் பொருள் கூறுவர். 29
10. அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
அந்தணர் என்பதற்கு மிக்க கருணையை உடையவர் என்பது பொருள். துறவிகள் எல்லா உயிர்களிடத்தும் கருணை கொண்டு வாழும் குணமுடைவர்கள். ஆதலால், அந்தணர. என்னும் சொல் மிக்க கருணையுடைய் துறவி களுக்கே சிறப்பாகப் பொருந்தும். 30
4. அறன் வலியுறுத்தல்
1.சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
அறம் ஒருவனுக்கு நல்ல மதிப்பினைத் தரும்; செல்வங்களையும் அளிக்கும். ஆதலால், உயிர்களுக்கு நன்மையைத் தருவதில் அறத்தினும் மேம்பட்டது வேறு ஒன்றும் இல்லை. 31
2.அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
அறம் செய்வதைக் காட்டினும் மேம்பட்ட செல்வமும் இல்லை. அதனைச் செய்யாது மறத்தலைக் காட்டலும் மிக்க துன்பமும் இல்லை. 32