பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 9
6
அஞ்சாதீர்!
ஏடுப்பு
உள்ளங் கொதித் தெழுவீர் - உணர்வு
ஊற்றுப் பெருக்கினைப் போலப் பெருகியே
(உள்ளங்)
தொடுப்பு
பள்ளிக் குழந்தைகள் உள்ளத்திலே - குலப்
பாகுபாட் டெண்ணத்தை ஊன்றிடவே
துள்ளிக் குதித்திடும் மண்டைகளை - நூறு
தூளாகச் செய்வதற் கெண்ணங்கொண்டே
(உள்ளங்)
பிள்ளைகளைத் தமிழ்க் கிள்ளைகளை - கொடும்
பேய்மனங் கொண்டவர் முன்தொழிலைக்
கொள்ள விளைப்பது நல்லதுவோ - பூணூற்
கூட்டங்கள் செய்திடுந் தீமைகண்டே
(உள்ளங்)
பயிர்த் தொழில் செய்பவர் பிள்ளைகளை - மேலே
படிக்க விடாமலே தடுத்ததன் பின்
உயிர்த் தொழில் மருத்துவர் பிள்ளைகளை - உயர்
வொன்றுமில் லாமற்செய் திட்டங்கண்டே
(உள்ளங்)
'நீதி மனு'ப்படி சூத்திரர்தம் - மக்கள்
நீசத் தொழில்களைச் செய்திடவும்
வேதியர் செய்திடுந் தீங்கு கண்டு - மிக
வேதனை யோடொன்று கூடிநின்றே
(உள்ளங்)
அச்சமுறுத்துவர் ஆட்கொல்லுவர் - பின்பு
ஆறேழு மாதஞ் சிறை கொடுப்பர்
நச்சுத் தனமான தீமை செய்து - தமிழ்
நாட்டாரை மாடுபோ லாக்குமுன்னே
(உள்ளங்)
கள்ளவுள்ளத் தோடு காட்டரசை - எங்கும்
காணாத சட்டம் வீண் திட்டங்களை
தெள்ளத் தெளிவுடன் கண்டுவிட்டோம் னித்
தீரமுடன் செய லாற்றிடவே
(உள்ளங்)