உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/இடங்கழிநாயனார்

விக்கிமூலம் இலிருந்து

இடங்கழிநாயனார் சோழநாட்டில் கோனாட்டைச் சேர்ந்த கொடும்பாவூரிலிருந்த அரசர். வேளிர் குலத்தவர். சிவன் கோயிலைச் செம்மையாய்ப் பரிபாலித்தவர். சிவனடியாருக்கு அமுது செய்விப்பதற்காக வறிஞரான சிவனடியார் ஒருவர் தம் அரண்மனையிலிருந்த நெல்லைத் திருடியபோது அவருக்கு மேலும் நெல்லும் பொன்னும் கொடுத்து முத்தி பெற்றவர்; பெரிய புராணம் கூறும் அறுபத்து மூன்று நாயன்மாரில் ஒருவர்.