பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70


தருகிறோம்' என்று கூற, பாஸ்கரன் பயந்து தழதழத்த குரலில், ஒரு விண்ணப்பம்! சிவாஜி, சரணாகதி சம்பந்தமாகப் பேசுவதற்காகத் தங்களைத் தனியே சந்திக்க விரும்புகிறார், இங்கேயே வர எண்ணினார் என்று வலைவீசும் டேச்சைத் துவக்கினார் சதிக்கூட்டத் தலைவன் கோபிநாத், 'இங்கே இருக்கும் பெரும்படை முன்னர், அஞ்சுகிறான் உங்கள் அசகாயசூரன் பிராமணரே! ஏன் மறைக்கிறீர் வெட்கமோ!' என்று கூறினார். அப்சல்கானின் ஆனந்தம் அளவு கடந்ததாகிவிட்டது, 'கோபிநாத் பண்டிட்ஜி! அவ்வளவு பயங்கொள்ளியா சிவாஜி' என்று கேட்டான் அப்சல்.

அந்தக் கேள்வியை எதிர்பார்த்துக் கொண்டிருந்த கோபிநாத், முகஸ்துதியை வாரி வாரி வீசினான் அப்சல்கானின் யூகம் அறியுமளவு.

'அதிலென்ன ஆச்சரியம். சேனாதிபதி அவன், உமது ஜெயங்களைப் பற்றிக் கேள்விப்படாமலா இருந்திருப்பான் ஏன் தான் அதுவரையில் நாதியற்ற நகரங்களையும் நெஞ்சில் உறுதியற்ற கும்பலையும் வெற்றிகண்டேன் என்று வீறாப்பு பேசித்திரிந்தான் இன்று மகத்தானதோர் படையை நடத்தும் தீர புருஷனாகிய அப்சல்கான். களத்திலே சிம்மம்போல் நிற்கும் தலைவன் வந்திருக்கிறான் என்று தெரிந்ததும், நடு நடுங்கிப் போய்விட்டான். பீஜப்பூர் சமஸ்தானத்தின் பெருமையை அறியானா? தன் பக்கம் பீஜபூரின் திருஷ்டி படாதிருந்தவரையிலே தப்பிப் பிழைத்தான். இப்போது?'

இந்த முகஸ்துதி, அடியோடு அப்சலைக் கவிழ்த்து விட்டது.