பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை
பம்பி - அடர்ந்தெழுந்து, 'கதித்தல் பம்மல் கஞறல் கன்றல், எழுச்சியின் மிகுதிக் கெய்தும் பெயரே" என்றார் திவாகரரும்.
பரதவர் - செம்படவர், நுளையர்,
பரி
―
"கடலோடுழந்த பனித் துறைப் பரதவ” என்றார் பதிற்றுப் பத்தினும்.
செலவு, செல்லுதல், “நிமிர் பரியமா” என்புழியும் இப் பொருள் காண்க. புற நானூற்றுரை.
பருவம் - பொழுது.
பரேர் - ‘பருஏர்' பெரிய அழகு. பலி - தேவருணவு, வடசொல். பள்ளி - தவத்தோர் இருப்பிடம், இப் பொருட்டாதல் புறப் பொருள் வெண்பாமாலை யுரை யிலுங் காண்க. வஞ்சிப் படலம்.
பறழ் - பன்றிக்குட்டி, "குட்டியும் பறழுங்கூற்றவண் வரையார்” என்னுந் தொல்காப்பிய மரபியற் சூத்திரத்தால் பன்னிக் குட்டியும் பறழ் எனப்படுதற்குரித்தாதல்
பாகு
காண்க.
குழம்பு.
பாசிழை – ‘பசுமை யிழை' பசிய அணிகலன்.
பிடி - பெண்யானை.
பிணர் - பொரிந்த வடிவு சருச்சரை.
பிணி - கட்டு, வார்க்கட்டு. பிணிக்கும் - கட்டும்.
பிணியகம்
221
சிறைக்களம்.
பிணை மானினத்திற் பெண், தொல். மரபியல்.
பிழி – கள்.
பிளிறு – முழங்கும்.
பிறங்கு - விளங்கும், உயர்ந்த, "பிறங்குநிலை மாடத்
துறந்தையோனே”,
புறநானூறு.
பீடு - பெருமைத் தன்மை.
புகர் - நிறம்; பச்சென்ற நிறம், திவாகரம்.
புணரி - கடல்.
புதவம் - அறுகு, ஒருவகைப்புல் என்பர் பிங்கலந்தையுள்
―
-
புதவு வாயில், "பூரித்துப் புதவந் தோறும்" என்றார் சீவக
சிந்தாமணியினும்.
புதை – அம்புக்கட்டு.
புயல் மழை
―
புரவி குதிரை.
புலம் - நிலம்.
புலம்பெயர் - தம் நிலத்தைக் கை விட்டுவந்த.
புலவு - பூலால், புலால் நாற்றம்.
புலிப் பொறித்து - புலியினுருவை இலச்சினையாக இட்டு
புழுக்கு - புழுக்கின இறைச்சி, "யாமைப் புழுக்கின்’”
என்றார் புறநானூற்றினும். புழை சிறுவாயில், திவாகரம்.