அம்பிகாபதி அமராவதி *
சிறைசெய் திணைநகின் மருப்பிற் குத்தி
முறைசெய் தென்கடன் முடிப்பென்
நிறைகவர்ந் தென்னை நெகிழ்வித்தீரே!
117
(மலர் மாலையாற் கட்டித் தன் காதலனைத் தன் பஞ்சணைக்கு ஈர்த்துச் செல்கின்றாள்)
அம்பிகாபதி :
இத்தகைய சிறையடைய
எத்தனை நாள் தவம்புரிந்தேன் முத்தனைய மூரலாய்!
மொழிக்குமொழி தித்திக்குந்
தத்தையே! யானடைந்த
தனிப்பேற்றை எவர்பெற்றார்!
இத்தனைக்குங் கைம்மாறொன்
றெங்ஙனம்யான் ஆற்றுவெனே!
அமராவதி :
அரும்புலமைக்களஞ்சியமாய் அழகினுக்கோர் உறைவிடமாய் விரும்புமென துளத்தெழுதும் ஓவியமாய் விளங்குமுமைப் பெரும்புவியிற் பெறுவதினுங் கைம்மாறு பிறிதுளதோ? கரும்பினுமென் அகத்தினிக்குங் காதல்வளர் கலையமுதே!
அம்பிகாபதி : என்னாருயிர்ப் பாவாய்! அமராவதி! விடியற் காலம் அணுகுகின்றது! எங்ஙனம் உன்னைப் பிரிந்து போவதென்று என் நெஞ்சமோ ஏங்குகின்றது! இத்தனை நாள் உன்னைக் கூடாமல் வருந்தினேன். இப்போது உன்னைக்கூடி வருந்துகின்றேன்!
அமராவதி : ஆம் பெருமான். உங்களை யான்தான் எங்ஙனம் பிரிந்திருப்பேன்! இந்த இராப்பொழுது ன்னுஞ் சிறிது நீளலாகாதா! கதிரவன் வராமற் றடை செய்த