128
நான்காம் நிகழ்ச்சி : நான்காம் காட்சி
களம் : கம்பர் இல்லம்.
இ
காலம் : காலை நேரம்
நயினார் பிள்ளை : பச்சே! பச்சே! நான் வந்திருப்பதாக நின் தலைவிக்குத் தெரிவி.
சாமி!
தோழி : (தெரிவித்து வந்து) மாளிகைமேல் வாருங்கள்
நயினார் : கண்மணி காவேரி? நின் தமையன் எங்கே?
காவேரி : (திடுக்கிட்டு) நேற்றிரவு வெளியே சென்றவர் இன்னும் வரவில்லை. சுவாமி! நீங்கள் இவ்வளவு விடியற் காலையில் வந்து அவரைத் தேடுவதுகண்டு என் உள்ளங் கலங்குகின்றது!
நயினார் : கலங்காதே கண்ணே! என் தந்தையார்க்குச் சிறிது நேரத்திற்கு முன்னேதான் நம் அரசரிடமிருந்து அழைப்பு வர, அவர் அங்கே சென்றிருக்கின்றார். செல்லும் போது உன்னை அச்சமின்றியிருக்கச் செய்யும்படி என்னை இங்கு ஏவினார்.
காவேரி : (மனம் பதைத்து) என்ன சுவாமி! நீங்கள் சொல்வது எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே! தமையனார்க்கு ஏதுந் தீங்குண்டோ? திறந்து சொல்லுங்கள்.
என்
நயினார் : நின் தமையனார்க்கு ஏதுந் தீங்கு வராது. என் தந்தையார் அதற்குத் தக்கது செய்வார்.
காவேரி : : சுவாமி! உண்மையைச் சொல்லுங்கள்! சொல்லுங்கள்! என் அண்ணனாரைப் பற்றிய செய்தி ஏதோ