திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை
107
உரியதந்தையாரான சிவபெருமானை அம்மையொடுஞ் சுட்டிக் காட்டியருளி;
66
முருந்து, பற்களின்
ண்மைக்குங் கூர்மைக்குஞ்
சிறுமைக்கும் உவமை; இஃதிவ்வாறு உவமிக்கப்பட்டுவருதல், முருந்தேரிளநகை” (துயிலெழுப், 88) என்னும் மணிமேகலை யானும், “முருந்தேய்க்கு முட்போலெயிற்றினாய்” என்னும் ஏலாதி (8) யானும் அறியப்படும்.
'பெயர்', இங்குப் புகழ்; “பெரும்பெயர்த் தலைத்தாண் மன்பெருஞ்சிறப்பின் மாநிதிக்கிழவன்” என்னுஞ் சிலப்பதி காரத்திற் (16: 84) போலவென்பது.
குழைத்தெடுத்தலாவது, குழையக்காய்ச்சி யெடுத்தலென்க. ‘வாய்மடுத்தல், உண்ணுதல்; “மதியுணரமகளென வாம்பல் வாய்மடுப்ப" வென்னும் பரிபாட லடியினும் (78) ப்பொருண்மை தெளியப்படும்.
'திவளொளி', அசையும் ஒளி; "நிலந்திவௗ” என்னுஞ் சிந்தாமணி (3022) யாற்பெறப்படும்.
சிவபாதவிருதயர் பழகுறு தந்தையெனப்பட்டார், அவர் சிறிது காலம் மட்டுமே தந்தையென உறவு பயிறலின்; அடிகள் சிவபெருமானை வாளாத் தந்தையெனக் குறித்தல்கொண்டு, திருஞான சம்பந்தர்க்கு
அவரே
தந்தையாராவரென்பது இனிதுணரப்படும்.
-
உரிமைத்
-
-
(48-51) பின்றை பின்பு, காண்தகு திருவிளையாடல் காண்டற்குத்தக்க செயற்கருஞ்செயல்களை, மாண்தக மாட்சிமையுண்டாக, செய்திறம் அறியார் உய்திறம்நோக்கி தவஞ்செய்தற்குரிய வகைகளைத் தெரியாதவர்கள் உய்யும் வகைகருதி, பல்பகல் இயற்றியபின்னர் பற்பலநாட்கள் செய்தருளியபின்;
அளந்துகாண்டற்குரிய
-
காண், முதனிலைத்தொழிற்பெயர்; திருஞானசம்பந்தர் செய்தருளிய திருவிளையாடல்கள் ஒவ்வொன்றும் அறிவான் அருமைபெருமை ம 6 வாய்ந்தனவா மென்றற்குக் ‘காண்டகு' வென அடைகொடுத்தோதப்பட்டது. “காண்டகு சிறப்பிற் கண்ணகி” யென்னுஞ் சிலப்பதிக ரத்துக்கு (2, 90) உரைகாரர் அடியார்க்கு நல்லார் 'காட்சிதகுஞ்