இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
24
து. ப.
முத்திறமும் நடுவன் - மிக ஒத்துரைக்கும் குடவன்
இசைத்தமிழ்க் கலம்பகம்
(முத்.)
உடன்பிறப் பன்பென்பதே வுற்றவன்கொள் பண்பிதே மடந்தபச் சொன்ன புதை
—
வடி
—
தமிழ்
மறந்திகழ் கற்பின் கதை.
30. யார் யார் எவ்வெப்பா வல்லார்?
(இசைந்த மெட்டிற் பாடுக)
1
வெண்பா விற்கே புகழேந்தி
விரியும் அகவற் கிளங்கோவே
பின்பாங் கலியே பெருங்கடுங்கோ
பிரிவஞ் சியுருத் திரங்கண்ணன்.
2
குறள்வெண் பாவில் திருவள்ளுவன்
குறையின் னிசைமுன் றுறையரையன் திரள்பஃறொடையுமா பதிசிவனாம் திரியுங் கலிவெண் பாகூத்தன்.
3
கொச்சகத் தரவருள் மொழித்தேவன் கோவைத் துறைமணி வாசகனார்
மெச்சுங் கலித்துறை திருத்தக்கார்
மேவும் திலதமுங் கோவையெலாம்.
4
தாழிசைத் தலைவன் சயங்கொண்டான் தகும்பல் மண்டிலம்* பெருங்கம்பன்
பாழிசை மருட்பா ஆரிதனார்
பரிபா டல்நல் லந்துவனார்.
(முத்.)