இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஞா. தேவநேயப் பாவாணர்
5
வண்ணத் திற்கே அருணகிரி
வசைபா டற்கே காளமேகம்
எண்ணிக் கொடுத்த அடிமுடிப்பில் இலகும் முனிவர் சிவஞானம்.
6
கடும்பா விற்குக் காளமேகம்
கருதும் இன்பா வெண்காடர்
அரும்பா மாம்பழப் பாவரிமா
அகலப் பாவும் மிகுகம்பன்.
- மண்டிலம் = விருத்தம்
31. தமிழ்நாடு
'பாருக் குள்ளே நல்ல நாடு' என்ற மெட்டு
ப.
நானி லத்தே நல்ல நாடு
―
என்றும்
நம்தமிழ் நாடு
அ.1
நானிலத் தும்மிகு நன்னிலத் தில்விளை
நால்வகைச் செல்வமும் சால்வதுடன்
வேனிலிற் கான்மலை வெம்மைகொள் பாலைபின்
விளைநில மாவதிந் நாடு
2
பொன்னொடு வெள்ளியும் போற்றும்பல் விரையும்
போர்வை பல்லணியுடை வேர்மருந்தும்
மின்னும்பல் மணிகளும் மிகுவிலை யாற்பெற
மேலுலகும் விரும்பும் நாடு
(நானிலத்)
(நானிலத்)
25