இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஞா. தேவநேயப் பாவாணர்
95. தமிழன் தாழ்வுணர்ச்சி
'காக்காய்க் கண்ணுக்கு' என்ற மெட்டு
1
சூத்திரன் என்று சொல்லாதே சொல்பவ ரோடே ஒல்லாதே மாத்திறந் தன்னைக் கொல்லாதே மடமைத் தாழ்வு பொல்லாதே.
2
நாற்பால் என்பது நாற்றொழிலே நடத்துந் தொழிலே நங்குலமாம்
ஏற்கா வகையிற் பிறப்போடே
இணைத்தார் ஆரியர் இழுக்காக.
3
யானை கட்ட வன்றொடரி
தானே எடுத்துத் தருதல்போல்
மானங் கெட்ட தமிழன்தான்
தானே தன்னைத் தாழ்த்திக்கொண்டான்.
பண்
―
சிந்து பைரவி
96. தமிழன் குலம்
ப.
நானொரு தமிழன் நான்வந்த வழியே தேனினு மினிய செந்தமிழ் மொழியே.
து. ப.
நானிலம் முழுதும் நல்லக விழியே
நண்ணமுன் எழுந்தது நறுந்தமிழ் ஒளியே
85
தாளம் - முன்னை
(நானொரு)