ஞா. தேவநேயப் பாவாணர்
106. இலக்கணவறிவில்லா எழுத்தாளர் 'மாங்காய்ப்பாலுண்டு' என்ற மெட்டு
1
இலக்கண மேயின்றி இந்நாளி லேபலர்
இலக்கியம் இயற்றுகின்றார்
விலக்கியே பயிற்றல் நன்றே.
―
அவரை
2
எழுத்தை யறிந்ததும் எழுத்தாளர் என்றுபேர் ஏற்றுக் கொள்வார் பலரே அதனை
மாற்றச் சொல்வார் இலரே.
3
அறிவிய லுணர்வின்றி அமருங் காதல்ஒன்றே வெறியாகச் செய்யுள் செய்வார் – பொருளும் எரியாகும் நெய்யிற் பெய்வார்.
4
புலமையில் லாதவர் புதுநூலி யற்றுதல்
நிலமே யில்லா வெற்றனே
வளமானதாய்க் கட்டலே.
_
மனையும்
5
இணையாரு மில்லாத எழிலாரும் மறைமலை
எழுத்தும் ஓரெழுத்தோ வென்றான்
அழுத்தமோ அழுத்த நின்றான்.
6
தென்சொல்லின் புணர்ச்சியே
தினையேனும் அறியாதார்
·
முன்சொல் ஈற்றில் லகர - மெய்ப்பின் என்கொல் வன்மெய் பகர.
நெஞ்சின்
7
தமிழை அறியாதார் தமிழெழுத்தை மாற்றத் தகுதியுண்டோ நாட்டிலே வாழ்வார் மிகுதியும் ஏமாற்றிலே.
95