138
1
வேறுபட்ட மொழியா ரெல்லாம் வேண்டு மட்டும் ஆங்கிலமாம் பேறுபெற்று வாழ்க வெனப் பெருந்தனமாய்ப் பன்முறையும்
கூறுபட்ட சொற்களெல்லாங் கொண்டுறுதி கூறியபின்
இசைத்தமிழ்க் கலம்பகம்
ஈறுமட்டும் பதவி தாங்க
எண்ணியிந்தி யார்மகிழ
(மாறி)
2
முழுமதியின் தன்னரசை
மூதறிஞர் எனத்தொடங்கி
விழுமதியின் பின்முறையாய்
வேறுபட்டுக் காருவாப்போல்
வழுமதியர் மொழிகேட்டு
வன்மை நடுவின்மையுடன்
குழுமி நின்ற குடியுரிமை
குலைத்துநெடுங் கொடுங்கோற்கே
163. வடவர் நம் தலைவரல்லர்
'சமரசம் உலாவும் இடமே' என்ற மெட்டு
ப.
வடவரோடு நாமும் சமமே - எவ்
வகையிலுந்தான்.
உ. 1
முந்தியிங் காங்கிலர் வருவதன் முன்பும் பிந்தியும் அவரே நீங்கிய பின்பும்
(மாறி)
இந்தியார் நம்மை ஆள்வதோர் பண்பும்
இல்லையே சிறிதும் எவ்வகையி லுந்தான்
(வடவ)
2
இந்தியின் றாரியம் இன்றமிழ் வேறு இரண்டும் ஒன்றாக இசையுமோ கூறு இந்தியும் தமிழ்மேல் இறைகொளு மாறு இல்லையே இயல்பும் எவ்வகையிலுந்தான்
(வடவ)