இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஞா. தேவநேயப் பாவாணர்
பஞ்சையராய் என்மக்கள் - முற்றும் பண்டை நூலை யிழந்தார்
எஞ்சியுள்ள நிலையும் - இனி இந்தியாற் போம்அழிந்தே.
3
தஞ்சமே யாருமில்லை
தன்னவரும் பகையே
―
இன்று
அஞ்சும் ஒடுங்கியினி என்றும்
அடிமையாகும் வகையே.
169. தமிழன் உடமை தமிழ் ஒன்றே 'நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்' என்ற மெட்டு
1
இருப்ப தெல்லாம் தமிழனுக்கே
இன்பத் தமிழொன்றே
இனியதையும் இழந்துவிட்டால்
இங்கே வாழ்வில்லை
பொருத்தமுறும் தாய்க்கொலையும்
புரிக என்றுரைத்தால்
பொதுமதியால் அவ்வுரையின்
புன்மை அறிந்திடுவீர்.
2
தன்வீட்டுள்ள நெருப்பும் - மிகத்
தப்பாமற் சுடும்தொடினே
தன்னாட் டுளதே யென்றோர் கட்சி தழுவின் தீயது தீங்காகும்
பின்னாட்கே அதுதெரிந்தால்
பிரிந்தே விடவேண்டும்
தன்கேட்டைத் தான்தேடின்
தடுப்பார் யாருமில்லை.
143
(இருப்ப)
(இருப்ப)