உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

பஞ்சையராய் என்மக்கள் - முற்றும் பண்டை நூலை யிழந்தார்

எஞ்சியுள்ள நிலையும் - இனி இந்தியாற் போம்அழிந்தே.

3

தஞ்சமே யாருமில்லை

தன்னவரும் பகையே

இன்று

அஞ்சும் ஒடுங்கியினி என்றும்

அடிமையாகும் வகையே.

169. தமிழன் உடமை தமிழ் ஒன்றே 'நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்' என்ற மெட்டு

1

இருப்ப தெல்லாம் தமிழனுக்கே

இன்பத் தமிழொன்றே

இனியதையும் இழந்துவிட்டால்

இங்கே வாழ்வில்லை

பொருத்தமுறும் தாய்க்கொலையும்

புரிக என்றுரைத்தால்

பொதுமதியால் அவ்வுரையின்

புன்மை அறிந்திடுவீர்.

2

தன்வீட்டுள்ள நெருப்பும் - மிகத்

தப்பாமற் சுடும்தொடினே

தன்னாட் டுளதே யென்றோர் கட்சி தழுவின் தீயது தீங்காகும்

பின்னாட்கே அதுதெரிந்தால்

பிரிந்தே விடவேண்டும்

தன்கேட்டைத் தான்தேடின்

தடுப்பார் யாருமில்லை.

143

(இருப்ப)

(இருப்ப)