ஞா. தேவநேயப் பாவாணர்
2
இந்நிலம் ஆங்கிலர் நீங்கின போது இந்தியே பொதுமொழி என்றாரோ ஓது தென்னவர் தெம்மாடி யானதே தீது
திரளானோர் கல்லாமைத் திறமுமே தோது.
(இந்தி)
3
ஏருழு வோன்மிக இளப்பமா னாலே
எருதுந்தான் அளியனாம் இனமுறை யாலே
ஆரியந் தெய்வமென் றேறிய மாலே
அரும்பி வரும்இந்தி அளவில்லா மேலே.
(இந்தி)
4
தென்மொழி யெல்லாமே தீந்தமிழ் சேரும் திரவிடர் இவ்வுண்மை தெளியார்எல் லாரும் தன்மொழி யாரெல்லாம் எண்ணுங்கால் நேரும் தமிழுக்கும் நல்லதோர் பெரும்பான்மை பாரும்.
(இந்தி)
5
இந்தியால் ஒற்றுமை என்றுமே இல்லை இனிவரார் ஆங்கிலர் இந்திய எல்லை இந்தியார் சூழ்ச்சியை இனியறிந் தொல்லை இருத்துக ஆங்கிலம் இல்லையே தொல்லை
(இந்தி)
6
சீனத்தை நோக்கவே சிறுதேசம் இந்து சீனங்கட் டாயமாய்ச் சேருமோ வந்து
ஏனைத் திசையுள்ள இந்தி வலிந்து ஏனிந்த நாட்டிற்குள் எய்தும் புகுந்து
(இந்தி)
7
ஆசியா தானொரு மாபெருங் கண்டம் அதனுள்ளே இந்தியா அமையும் உட்கண்டம் பேசுறும் பற்பல மொழிகளைக் கொண்டும்
பேணுவீர் இவ்வுண்மை பிறவும்உட் கொண்டும்
(இந்தி)
149