உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

2

இந்நிலம் ஆங்கிலர் நீங்கின போது இந்தியே பொதுமொழி என்றாரோ ஓது தென்னவர் தெம்மாடி யானதே தீது

திரளானோர் கல்லாமைத் திறமுமே தோது.

(இந்தி)

3

ஏருழு வோன்மிக இளப்பமா னாலே

எருதுந்தான் அளியனாம் இனமுறை யாலே

ஆரியந் தெய்வமென் றேறிய மாலே

அரும்பி வரும்இந்தி அளவில்லா மேலே.

(இந்தி)

4

தென்மொழி யெல்லாமே தீந்தமிழ் சேரும் திரவிடர் இவ்வுண்மை தெளியார்எல் லாரும் தன்மொழி யாரெல்லாம் எண்ணுங்கால் நேரும் தமிழுக்கும் நல்லதோர் பெரும்பான்மை பாரும்.

(இந்தி)

5

இந்தியால் ஒற்றுமை என்றுமே இல்லை இனிவரார் ஆங்கிலர் இந்திய எல்லை இந்தியார் சூழ்ச்சியை இனியறிந் தொல்லை இருத்துக ஆங்கிலம் இல்லையே தொல்லை

(இந்தி)

6

சீனத்தை நோக்கவே சிறுதேசம் இந்து சீனங்கட் டாயமாய்ச் சேருமோ வந்து

ஏனைத் திசையுள்ள இந்தி வலிந்து ஏனிந்த நாட்டிற்குள் எய்தும் புகுந்து

(இந்தி)

7

ஆசியா தானொரு மாபெருங் கண்டம் அதனுள்ளே இந்தியா அமையும் உட்கண்டம் பேசுறும் பற்பல மொழிகளைக் கொண்டும்

பேணுவீர் இவ்வுண்மை பிறவும்உட் கொண்டும்

(இந்தி)

149