ஞா. தேவநேயப் பாவாணர்
2. 1
மாலவர் அனுமந்த ராயற்கும் அங்கம்மைக்கும் மாடப்பள்ளி யில்முதல் மகனெனத் தோன்றினரே காலமே கல்விகற்றுக் கற்பிப்புப் பட்டம்பெற்றுக் கணிதநல் லாசிரியப் பணிசெய வூன்றினரே.
2
வாணியம் பாடிக்குப்பின் சேலங்கல் லூரியிரு
(சேலங்)
பானொடுமூன் றாண்டாகப் பதிந்திரண்டாம் நிலையை மாணவே முதலென மாற்றியேழை மாணவர்
மாபெருந் தொகையராய்த் தேறச்செய்தார் கலையே.
(சேலங்)
3
பொன்னிற நெடுமெய்யும் இன்னழ கொண்முகமும்
மன்னவர் குலமென எண்ண வுறுவனவே
புன்னகை யொடுதிரு மண்நுதல் அணிசெய
மென்னடை நடந்துபோம் விண்ணவனோ எனவே (சேலங்)
4
மனையுறு தகையெலாம் மருவுகன கம்மையை
மாறுகொண் டிகழ்வார்முன் ஏறுபோல் நடையுறக்
கனையுறு முழவுடன் கடிமணம் புரிந்தனர்
கண்ணப்பன் முதல்நான்கே எண்ணப்பிள் ளைகள்பெற.
(சேலங்)
5
ஆயிரத்தின் மேலேதொள் ளாயிரத் தைம்பதான
ஆண்டினில் எட்டாம்மாதம் அணைந்தபத் தொன்பதாம்நாள்
மாயிருள் தமிழக மனத்திடை பரவவே
மறைந்த திராமசாமிக் கவுண்டர்எனும் பொன்பானாள்.
(சேலங்)
219