குடை மங்கலம்:
புறப்பொருள்
259
நான்கு திசைகளினும் தனது புகழ் பெருகும் படி அரியணைமிசைச் செம்மாந்திருந்த மன்னனுடைய குடையைப் புகழ்ந்தது.
(எ.டு)
66
'தன்னிழலோர் எல்லோர்க்கும் தண்கதிராம் தற்சேரா
வெந்நிழலோர் எல்லோர்க்கும் வெங்கதிராம்- இன்னிழல்வேல் மூவா விழுப்புகழ் முல்லைத்தார்ச் செம்பியன்
கோவாய் உயர்த்த குடை.
குதிரை மறம்: (அ)
நொச்சியாரது குதிரையின் மறப்பண்பைப் பாராட்டியது
குதிரை மறம் என்னுந்துறையாம்.
(எ.டு)
“தாங்கன்மின் தாங்கன்மின் தானை விறன் மறவர்
ஓங்கல் மதிலுள் ஒருதனிமா-ஞாங்கர்
மயிரணியப் பொங்கி மழைபோன்று மாற்றார்
உயிருணிய ஓடி வரும்.
குதிரைமறம்: (ஆ)
தும்பை மன்னனது குதிரைப் படையின் தறுகண்மையைச் சொல்லியது குதிரைமறம் என்னும் துறையாம்
(எ.டு)
66
'குந்தங் கொடுவில் குருதிவேல் கூடாதார்
வந்த வகையறியா வாளமருள்- வெந்திறல் ஆர்கழல் மன்னன் அலங்குளைமா வெஞ்சிலை வார்கணையின் முந்தி வரும்.
குழவிக் கண் தோன்றிய காமப் பகுதி:
குழவிப் பருவத்தையுடைய சிறாரிடத்து மங்கையர் காமுறு தலைச் சொல்லியது குழவிக்கண் தோன்றிய காமப் பகுதி என்னும் துறையாம்.